பசி
நட்ஹாம்சன்
“ஏழைக்கு மனசாட்சி இருப்பது அடுக்குமா? பசி தீரச் செய்யவேண்டியதைச் செய்ய வேண்டும்.”.
**
வெட்கமும் பசியும் என்னைப் பிடுங்கித் தின்ன வெளியேறினேன். பசி காரணமாக நான் நாயாகி விட்டேன். கெஞ்சியும் கிடைக்கவில்லை. இதுவும் முடிவுற வேண்டியதுதானே, ஏற்கனவே தாங்க முடியாத அளவுக்கு வந்துவிட்டது. பிச்சையும் கேட்டுப் பார்த்து விட்டேன். இந்த ஒரு நாளில் என் ஆன்மாவே துடித்துப் போய்விட்டது. கெஞ்சிப் பல்லைக் காட்டிவிட்டேன். பயன் இல்லையே..
எனக்கே என்னைப் பிடிக்கவில்லையே! எப்படியாகிவிட்டேன் நான்.
*
என்னென்ன அவமானங்கள்…… பிச்சைக்காரனின் சொத்தைக் கூடத் திருடத் தயாராகிவிட்டேன். நான் அவன் பாத்திரத்திலிருந்து எடுத்து வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்ளக் கூட தயாராகி இருந்தேன்.
*
பசி அதிகரித்தது. ஆனால், உணவை நினைத்தால் வயிற்றைப் புரட்டியது. என்னையே தின்று விடும் போல இருந்தது. இரக்கம் காட்டாமல் பசி எனக்குள் அரித்தது. குடலுக்குள் மாயமாக வேலை செய்தது. குடலை அரித்துத் தின்னும் பல லட்சம் பூச்சிகளாகப் பசியை அறிந்து கொண்டேன்.
நூலிலிருந்து….

ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்
ஒரு கடலோர கிராமத்தின் கதை
பிர்சா முண்டா
தீராப் பகல்
திருக்குறள் பரிமேலழகர் உரை
அப்புறம் என்பது எப்போதும் இல்லை
கிருமிகள் உலகில் மனிதர்கள்
இந்தியா 1944 - 48
மா. அரங்கநாதன் - நவீன எழுத்துக்கலையின் மேதைமை
தமிழாராய்ச்சியின் வளர்ச்சி
சுதந்திரத்தின் நிறம்
ஒரு துளி பூமி ஒரு துளி வானம்
குலசேகர ஆழ்வார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
இறையுதிர் காடு (இரு பாகங்கள்)
இவன்தான் பாலா
உண்மை இதழ்: ஜூலை – டிசம்பர் (முழு தொகுப்பு 2019)
சிறிய எண்கள் உறங்கும் அறை
சி. இலக்குவனார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
இந்து தேசியம்
பொது அறிவுத் தகவல்கள்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-7)
குமாயுன் புலிகள்
பாதை அமைத்தவர்கள்
நித்தியவல்லியின் கடனக்கழிப்பு
தேவதைகள் சூனியக்காரிகள் பெண்கள்
சட்டம் உன் கையில்
மாநில சுயாட்சி
நடுநாட்டுச் சிறுகதைகள்
ஸ்ரீ ஆஞ்சநேயர் புராணம்
திருப்பதி வெங்கடாஜலபதி மகிமையும் வரலாறும்
மாக்பெத்
இந்தியா தோமா வழி திராவிடக் கிறிஸ்தவ நாடே ... எவ்வாறு?
கிராம கீதா
உண்மை இதழ்: ஜனவரி - ஜுன் (முழு தொகுப்பு 2019)
தமிழ்சினிமா -படைப்பூக்கமும் பார்வையாளர்களும்
கவிதையும் மரணமும்
கொரோனா வீட்டுக் கதைகள்
சொற்களில் சுழலும் உலகம்
சொற்களைத் தவிர வேறு துணையில்லை
மனைவி சொல்லே மந்திரம்
மாஃபியா ராணிகள்
மான்குட்டியின் மிமிக்ரி (சிறார்க் கதைகள்)
அன்பும் அறமும்
இராமன் எத்தனை இராமனடி!
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 5)
இந்திரா செளந்தர்ராஜன்
நீதி - ஒரு மேயாத மான்
ஏன், பெரியார் மதங்களின் விரோதி?
சங்கர மடத்தின் உண்மை வரலாறு
முஸ்லிம் அடையாளம்- இந்துத்துவ அரசியல்
பார்ப்பன மேலாதிக்கம்
உரிமைகள் ஒரு தத்துவக் கண்ணோட்டம்
அன்பாசிரியர்
கலவரம்
அற்புதமான களஞ்சியம்
துயரமும் துயர நிமித்தமும்
நெய்தல் கைமணம்
கபீர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பட்டாம்பூச்சியின் புகைப்பட ப்ரியங்கள்
ஆர்.எஸ்.எஸ் ஓர் திறந்த புத்தகம்
பௌத்த வேட்கை
திருக்குறள் நம்மறை - வாழ்வியலுரை
அறம்
காலந்தோறும் பெண்
உரைகல்
பொய்த் தேவு
பவித்ரஞானேச்வரி (பாகம் - 2)
கற்பக மலர்கள் - திருக்குறள் கட்டுரைகள்
என் கதை
நினைவின் தாழ்வாரங்கள்
டிங்கினானே (வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரைகள்)
வடநாட்டில் பெரியார் (பாகம்-1)
மாஸ்டர் ஷாட் - 2
நகுலன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
இராஜேந்திர சோழன்
பேராசிரியர் மோரியுடன் நான் செலவிட்டச் செவ்வாய்க் கிழ்மைகள்
ஜலதீபம் (மூன்று பாகங்களுடன்)
பயணம் (உலகச் சிறுகதைகள்)
குடும்பமும் அரசியலும்
எஞ்சும் சொற்கள்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-5)
குற்றப் பரம்பரை
இந்து மதத்தைப் பற்றி ஏன் பேசுகிறோம்?
கடவுளின் கதை (பாகம் - 1) ஆதிமனிதக் கடவுள்கள் முதல் அல்லாவரை
ரத்த ஞாயிறு (வீரசத்ரபதி சிவாஜி வரலாற்று நாவல்)
திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்
பயம் தவிர்ப்போம்
செகாவ் சிறுகதைகள்
மகாபாரதம்
பெரிய புராண ஆராய்ச்சி
பசி
தொல்காப்பியப் பூங்கா
ஆற்றுக்குத் தீட்டில்லை
மரணத்தின் பின் மனிதர் நிலை
நேரு சிந்தனை: இலக்கும் ஏளனமும்
இலக்கணவியல்: மீக்கோட்பாடும் கோட்பாடுகளும்
வகுப்புரிமை போராட்டம்
மனிதனின் மறுபிறப்பு
தமிழகத்தில் தேவரடியார் மரபு - பன்முக நோக்கு
தேய்புரி பழங்கயிறு
தழும்பு(20 சிறு கதைகள்)
ஈராக் - நேற்றும் இன்றும்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 7)
வணக்கம் துயரமே
அம்பேத்கரின் வழித்தடத்தில்... வரலாற்று நினைவுகள்
மனம் உருகிடுதே தங்கமே!
அன்பிற் சிறந்த தவமில்லை
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 2)
அறிவுரைக் கொத்து
யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை
மண் குடிசை
நற்றிணை மூலமும் விளக்கவுரையும் (பாகம் 2)
பொன் வேய்ந்த பெருமான் (வரலாற்று நாவல்)
கொரங்கி
யாசுமின் அக்கா
கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்
இராஜேந்திர சோழன்
ஜீவ சமாதிகள்
நீதிக்கட்சி இயக்கம் 1917
இந்து ஆத்மா நாம்
ராஜ திலகம்
திராவிட லெனின் டாக்டர் டி.எம்.நாயர்
தமிழ் வாழும் வரை தமிழ் ஒளி வாழ்வார்
ஒரு ரகசிய விருந்துக்கான அழைப்பு
Mother
அகிலன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
நாயகன் - பெரியார்
நன்னம்பிக்கைக்கு ஆதாரங்கள்
இயற்கையின் விலை என்ன ? 


Janaki Ramaraj –
வாசிப்பு அனுபவம்:
நூல்: பசி
ஆசிரியர்: க.நா.சு. (மொழிபெயர்ப்பு நாவல்)
நோபல் பரிசு பெற்ற நட் ஹாம்சன் அவர்களின் ‘Hunger’ நாவல் தமிழில் திரு. க.நா.சு அவர்களால் ‘பசி’ என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
‘பாடாத தேனீ உண்டா, உலவாத தென்றல் உண்டா, பசிக்காத வயிறு உண்டா’ என்ற பாவேந்தரின் வரிகள் நினைவுக்கு வந்தன இந்நாவலை படித்த பிறகு. மனித வாழ்வில் கொடுமையிலும் கொடுமை பசிக்கொடுமையே. பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பது நாமறிந்ததே. பசி எந்த ஒரு நல்ல மனிதனையும் எவ்வளவு கீழ்மையான வேலையையும் செய்ய வைத்துவிடும்.
பசி கொண்ட ஒரு இளம் எழுத்தாளனின் கதையே இந்நாவல். போதிய வருமானம் இல்லாமல் தன் பசியைப் போக்கிக்கொள்ள ஒவ்வொரு நாளும் அவன் படும்பாடு மிகவும் உணர்ச்சி பூர்வமாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.
அவனிடம் இருக்கும் அனைத்தையும் அடகுக் கடையில் விற்கிறான். தன் உள்சட்டை உட்பட. ஆயினும் பசியின் கோரத்திலிருந்து அவனால் விடுபட முடியவில்லை. கடவுளை சபிக்கிறான், தனக்குத் தானே பேசிக் கொள்கிறான், தனது துரதிருஷ்டத்தை நினைத்து அழுகிறான், ஒவ்வொரு நாளையும் கடப்பதென்பது பெரும் போராட்டமாக இருக்கிறது. பசி தாங்க இயலாமல் தனது விரலை சப்புகிறான், மரத்துண்டை சுவைக்கிறான், ஒரு சமயத்தில் தனது விரலைக் கடிக்கிறான் இரத்தம் வருகிறது, அவனுக்கு வலியை விட பசியாறுவதே பெரிதாகத் தெரிகிறது. பசி பொறுக்க இயலாமல் அவன் படும் அவதியை வார்த்தைகளால் ஆசிரியர் விவரித்திருக்கும் விதம் ஆழமானது. இது அத்தனையும் அவனின் உணர்ச்சிகளால் விவரிக்கப்பட்டுள்ளது.
புத்தகம் வெளியிட ஒவ்வொருவராக சந்திக்கிறான். அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிகின்றன. பத்திரிக்கைகளில் கட்டுரை எழுதும் வாய்ப்பு மட்டுமே கிடைக்கிறது. அதுவும் தொடர்ந்து கிடைப்பதில்லை. அதற்கு கிடைக்கும் சொற்ப வருமானம் ஓரிரு நாள் வயிற்றுப்பாட்டை கழிக்கவே உதவுகிறது. மற்ற நாள்களில் பசியின் பிடியிலிருந்து அவனால் மீள இயலவில்லை. அவனெடுக்கும் முயற்சிகளும் அவனது மனநிலையும் ஒரு எழுத்தாளன் படும் பாட்டை தத்ரூபமாக பதிவு செய்கிறது.
ஆனால் எந்தவொரு நிலையிலும் தான் பரம ஏழை என்று எவரிடத்திலும் காட்டிக்கொள்ள விரும்பவில்லை அவன். அவ்வளவு பசியிலும் நாணயஸ்தனாகவே வாழ விரும்புகிறான். கட்டுரைகளுக்குக் கூட முன்பணம் கேட்க விரும்புவதில்லை அவன். வாடகை கேட்கிறாள் வீட்டுக்காரி. அதை கொடுக்க முடியாததை எண்ணி வருந்துகிறான்.
அவனது அழுக்கான ஆடையையும், ஒட்டிய வயிற்றையும், குழி விழுந்த கன்னங்களையும், மெலிந்த தேகத்தையும் கண்டு இந்த உலகம் அவனை அணுகும் விதமும், ஒவ்வொரு நாள் வயிற்றுப்பாட்டுக்கும் அவன் உதவி கேட்டு தட்டப்படும் கதவுகள் எந்தவித கருணையுமின்றி சாத்தப்படுவதும் உலகின் முகத்தை அறியச் செய்கின்றன.
ஆனால் அவனோ தனக்கு கிடைக்கும் சொற்ப வருமானத்திலும் தன்னைப் போல் பசியில் வாடுபவனுக்கு உதவுகிறான். பசியிலிருப்பவன் படும் துன்பத்தை உணர்கிறான்.
இளம்பெண் ஒருத்தியை சந்திக்கிறான், அவளது சந்திப்பு அவனது மனதிற்கு மகிழ்வூட்டுகிறது. இருள் வந்த பிறகான மாலை நேரங்களிலே தான் அவளை சந்திக்கிறான். வெளிச்சத்தில் அவனது தோற்றத்தைக் கண்டால் வெறுத்துவிடுவாளோ என அஞ்சுகிறான்.
அவனது மனப்போராட்டங்களையும் பசித்த வயிற்றை நிரப்ப இயலாத நிலையில் அவனது உணர்ச்சிகளையும் நமக்கு கடத்தியதில் மிகுந்த வெற்றி பெற்றுள்ளார் ஆசிரியர். எல்லாரும் வாசிக்கக்கூடிய தரமான நாவல்.
ஜானகி ராமராஜ்