1 review for பெண் ஏன் அடிமையானாள்?
Add a review
You must be logged in to post a review.
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
Subtotal: ₹3,410.00
Subtotal: ₹3,410.00
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
____₹50.00
இந்நூல் – உலக ஜனத் தொகையில் ஒரு பாதியாய் மக்களின் தோற்றத்திற்கு நிலைக்களனாய் விளங்கும் பெண்ணுலகு கற்பு, காதல், விபச்சாரம், கைம்மை, சொத்துரிமை இன்மை முதலிய கட்டுப்பாட்டு விலங்குகளால் தளையப்பட்டுள்ளதை சுட்டுகிறது. மூடநம்பிக்கையால் அல்லற்பட்டு வரும் பெண்களின் விடுதலைக்கும் வருங்கால மக்களின் பகுத்தறிவு வளர்ச்சிக்கும், சுயமரியாதைக்கும் தடையாயிருக்கும் கட்டுப்பாடு என்னும் விலங்கொடித்து கர்ப்பத்தடை, சொத்துரிமை முதலியவைகளைப் பெற்று பெண்கள் சுதந்திரம் பெற வழிவகுக்கிறது.
Delivery: Items will be delivered within 2-7 days
You must be logged in to post a review.
அனைத்தும் / General
Arunthathi ravishankar –
எல்லோரிடமும் நேர்மறை எதிர்மறை குணங்கள் உண்டு அவர்களிடமிருந்து நல்ல கருத்துக்களை மட்டும் எடுத்துக் கொள்வோம் என்பது என் கருத்து.
பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டோம், அன்பின் பெயரால், மரியாதையின் பெயரால் அடிமையானோம்…அவற்றிலிருந்து எவ்வாறு விடுதலை பெறுவது என்பதே இப்புத்தகத்தில் உள்ளது கருத்துக்கள்..
பத்து அத்தியாயங்கள் கொண்ட புத்தகத்தில் கற்பில் துவங்குகிறது பெண்ணுரிமைக்கு எதிரான பெரியாரின் வாதம்.
உலகப் பொதுமறையாம் திருக்குறள் படி வாழுவோம் என்று நாம நினைச்சுட்டு இருந்தா திருவள்ளுவரை சும்மா சரமாரி கேள்விகளால் துளைத்து எடுத்து இருக்கிறார்( ஒரு நீயா நானா வே நடத்தலாம் போல.. )
“பெய்யென பெய்யும் மழை “குறளில் சொன்னது போல கற்பு நெறி தவறாத பெண் சொன்னால் மழை கூட பெய்யும் என்ற வள்ளுவரின் கருத்தை அன்று எத்தனை கணவன்மார்கள் சோதித்து பார்த்திருப்பார்கள்?. என இப்போது தோன்றுகிறது.
இந்த புத்தகம் எழுதப்பட்டு சுமார் 78 வருடங்கள் ஆகியிருக்கிறது. இன்று பல துறைகளில் பெண் சாதிக்க கல்வி மட்டுமே உற்ற துணையாய் இருந்திருக்கிறது. சில சமயங்களில் ஆண்கள் கூட அப்பாவாக, அண்ணனாக, கணவனாக, தோழனாக என பெண் சாதிக்க உறுதுணையாக இருக்கிறார்கள். நன்றிகள்
கணவனை இழந்த பெண்ணுக்கு விதவை எனப் பெயரிட்டு பல சடங்குகள் நடத்தும் முறை இன்றும் பரவலாக உள்ளது. கணவனை இழந்து மறுமணம் புரியும் பெண்ணின் மீதான சமூகத்தின் பார்வை இன்றும் மிகவும் கீழ்த்தரமாக உள்ளது. இந்நிலை மாற வேண்டும்.
பெண்களை தேவதைகள், கடவுள் எனப் போற்றத் தேவை இல்லை. சக உயிருக்கான உரிமையை அளித்தால் போதும் என்பது என் கருத்து.