உலகம் இதுவரை காணாத பேரிதிகாசத்தை உருவாக்கிய கிருஷ்ண துவைபாயனர் என்ற இயற்பெயர் கொண்ட வியாசர், மகாபாரதத்தில் மனிதர்களின் அனைத்து முகங்களையும் – உள்முகங்களை – வரைந்து காட்டியுள்ளார். சகுனி ஒவ்வொரு முறையும் காயை உருட்டும்போதும், தருமன் தோற்றானா என்று பேராவலுடன் கேட்கிற திருதராஷ்டிரன் அவருடைய மகன். குலநாசத்துக்குக் காரணமாகிற துரியோதனனைத் தியாகம் செய், சிறைப்படுத்து, நாடு கடத்து என்று அறம் சொல்கிற விதுரனும் அவர் மகன். இருவரின் மேலும் அவருக்குப் பட்சமும் இல்லை. பாதகமும் இல்லை. அவர்கள் யாரோ, அவர்களின் உள்ளங்கை ரேகையோடு, அவர்களின் இதயம் எப்படித் துடிக்கிறதோ அதை அப்படியே சொல்வதே வியாச லட்சணம். இன்னும் ஆழ்ந்து போனால், இந்தக் கதை, இந்த மனிதர்கள், எல்லாமும் அவருக்கு வெறும் உபகரணங்கள்தான். அவரிடம் ஆழ்ந்திருக்கும் கவி உள்ளமும், தத்துவ ஞானமும், அவர் கட்டமைக்கும் தர்மங் களும், புறக்கணிக்கும் பழைமையும், புதுசாக உருவாக்கும் வாழ்க்கைத் தர்மங்களுமே நாம் நுணுகிக் கற்கத்தக்கவை.

வில்லி பாரதம் (பாகம் - 5)
95 ஆண்டுகளுக்கு முன்பே துவங்கிய திராவிடர் சமூகப் புரட்சி
69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்?
13 மாத பி.ஜே.பி ஆட்சி
21ஆம் நூற்றாண்டு ஏகாதிபத்தியம்
கடல் புறா (மூன்று பாகங்கள்)
வில்லி பாரதம் (பாகம் - 4)
புது பஸ்டாண்ட்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 10)
ததாகம்
கொங்குத் தமிழக வரலாறு
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 1)
கலை இலக்கியம்
நான் நானல்ல
நுழை
நாகநாட்டரசி குமுதவல்லி
21 ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்
திருப்பாவையும் திருவெம்பாவையும் 


Reviews
There are no reviews yet.