உலகம் இதுவரை காணாத பேரிதிகாசத்தை உருவாக்கிய கிருஷ்ண துவைபாயனர் என்ற இயற்பெயர் கொண்ட வியாசர், மகாபாரதத்தில் மனிதர்களின் அனைத்து முகங்களையும் – உள்முகங்களை – வரைந்து காட்டியுள்ளார். சகுனி ஒவ்வொரு முறையும் காயை உருட்டும்போதும், தருமன் தோற்றானா என்று பேராவலுடன் கேட்கிற திருதராஷ்டிரன் அவருடைய மகன். குலநாசத்துக்குக் காரணமாகிற துரியோதனனைத் தியாகம் செய், சிறைப்படுத்து, நாடு கடத்து என்று அறம் சொல்கிற விதுரனும் அவர் மகன். இருவரின் மேலும் அவருக்குப் பட்சமும் இல்லை. பாதகமும் இல்லை. அவர்கள் யாரோ, அவர்களின் உள்ளங்கை ரேகையோடு, அவர்களின் இதயம் எப்படித் துடிக்கிறதோ அதை அப்படியே சொல்வதே வியாச லட்சணம். இன்னும் ஆழ்ந்து போனால், இந்தக் கதை, இந்த மனிதர்கள், எல்லாமும் அவருக்கு வெறும் உபகரணங்கள்தான். அவரிடம் ஆழ்ந்திருக்கும் கவி உள்ளமும், தத்துவ ஞானமும், அவர் கட்டமைக்கும் தர்மங் களும், புறக்கணிக்கும் பழைமையும், புதுசாக உருவாக்கும் வாழ்க்கைத் தர்மங்களுமே நாம் நுணுகிக் கற்கத்தக்கவை.

இந்த இவள்
இரட்டையர்
விடுதலைப் போரில் தமிழகம் - தொகுதி 1
வைக்கம் வீரரும் ஜெயமோகனின் கயமையும்
அலர்ஜி
64 காயத்ரீ மந்திரங்களும் துரகாசப்தசதீ மந்திரங்களும்
108 - திவ்ய தேச உலா (பாகம் - 1)
புலிகளுக்குப் பின்னரான தமிழ் அரசியல்
பெண் ஏன் அடிமையானாள்?
மோடி மாயை
ஸ்ரீ தசமஹா வித்யா என்னும் பத்து மஹா சக்திகளின் ஸித்தி தாரண-பயநிவாரண-வரப்ரதான-கவிதாபாடன-யந்த்ர மந்த்ர கவச ப்ரம்மாஸ்த்ரம்
ராமனும் கிருஷ்ணனும் ஒரு புதிர்
ஸ்ரீ வேங்கடேச புராணம்
ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகளின் வாழ்வும் வாக்கும்
இராவணன் வித்தியாதரனா?
ஸ்ரீ பாஷ்யம்
ஸ்ரீமத் பாகவதம் 


Reviews
There are no reviews yet.