1801 – நாவல்
இந்திய சுதந்திர வரலாற்றில் விடுதலை எழுச்சிக்கான முதல் குரல் தென்னகத்தில்தான் ஒலித்தது. ஒலிக்கச் செய்தவர்கள் பூலித்தேவர், திப்பு சுல்தான், கட்டபொம்மன், தூந்தாஜி வாக், மருது பாண்டியர்கள், ஊமைத்துரை, விருப்பாச்சி கோபால் நாய்க்கர், தீரன் சின்னமலை உள்ளிட்ட போராளிகளே.
தென்னிந்தியாவின் போராளிகளை ஒன்று திரட்டி மருது சகோதரர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக 1801-ஆம் ஆண்டு நடத்திய போராட்டமே இந்திய விடுதலைப் போராட்டத்தின் தொடக்கமாகும். ஆங்கிலேயர்கள் மிக அதிகமான மனித இழப்புகளை சந்தித்ததும் இந்தப் போர்க்களத்தில்தான். இந்திய விடுதலைப் போராட்டக்காரர்கள் முதன்முதலில் நாடுகடத்தப்பட்டதும் இப்போரில் தான்.
உலகம் முழுக்க நடந்த விடுதலைப் போர்களின் விழுச்சிக்குப் பல காரணங்கள் இருந்துள்ளன. தென்னிந்திய விடுதலைப் புரட்சியின் வீழ்ச்சிக்குக் காரணமாய் அமைந்தது சில தனி நபர்களின் துரோகம் மட்டுமே. சில நூறு பணங்கள், சிறு துண்டு நிலம், ஆசை வார்த்தைகள், அதிகாரத்தில் பங்கு, ஆட்சியில் பங்கு என ஆங்கிலேயர்கள் விரித்த வலையில் விழுந்து துரோகிகளாக மாற ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம்.
முதல் இந்திய சுந்தந்திரப் போரின் எழுச்சி, வீழ்ச்சி, 18 – ஆம் நூற்றாண்டு மக்களின் வாழ்க்கை, பிரிட்டிஷ் இந்தியக் கால தமிழகம், ஆங்கிலேயர்களின் இந்திய வாழ்க்கை எனப் பல்வேறு கதைக்களன்கள் விவரிக்கப்பட்ட நாவலே ’1801.

இதிகாசங்களின் தன்மைகள்
இளைஞர்க்கான இன்றமிழ்
அசைந்தபடியே இருக்கிறது தூண்டில்
காக்டெய்ல் இரவு
தெளிச்சேரி திருக்கோயில்
ரேஷன் கார்டு முதல் சொத்து வாங்குவது வரை எப்படி?
கார்மெலின்
வளரும் குழந்தைகளுக்கான திட்டமிட்ட ஆரோக்கிய உணவு வகைகள்
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பேசுகிறார்
திருநிறை ஆற்றல்
அஷ்டா தச புராணங்கள் என்னும் பதினெண் புராணங்கள்
மதமும் சமூகமும்
நிழலைத் துரத்துகிறவன்
சிவாஜி கணேசனின் மார்லன் பிராண்டோ உடனான ஒரு சமர்
அதிசய சித்தர் போகர்
ஜே.பி.சந்திரபாபு திரையிசைப் பாடல்கள்
மண்ணும் மக்களும்
நொறுங்கிய குடியரசு
ஜெருசலேம் - உலகத்தின் வரலாறு
மத்தி
மனசே மனசே
ஜப்பான் – ஒரு கிற்றோவியம்
வண்ணநிலவன் சிறுகதைகள்
தமிழால் தலை நிமிர்வோம்
திருக்குறள் - புதிய உரை
திருக்குறள் - THIRUKKURAL
இலக்கணம், சொற்களஞ்சியம் மற்றும் பேசும் ஆங்கிலத்திற்கான ஆசிரியர்களின் கையேடு
எந்தன் உயிர்க் காதலியே
அயலான்
விஞ்ஞான முறையும் மூடநம்பிக்கையும் (பாகம்-1 - 2)
உலகின் கடைசி மனிதன்
மறைந்துபோன மாட்டுத் தாவணிகள்
புதிய தமிழ் இலக்கிய வரலாறு (3 பாகங்கள்)
ஜே.ஜே: சில குறிப்புகள்
விடுதலைப் போரில் தமிழகம் - தொகுதி 1
பகவான் புத்தர்
துருவன் மகன்
பெரியார் ஒரு சகாப்தம் ஏன்? எப்படி?
மாக்சீம் கோர்க்கி கதைகள்
மயக்கும் மது
மாதி
நடிப்புச் சுரங்கமான நடிகர் திலகம்
அசை: ஒரு செய்தியாளனின் எழுதப்படாத குறிப்புகள்
வாழ்க்கை வழிகள்
நாயகன் - அம்பேத்கர்
தொடுவானம் தேடி
புயலிலே ஒரு தோணி
உன்னைச் செதுக்கி உயர்வு பெறு
மகாபாரதத்தில் வர்ண(அ) தர்மமும் பெண்ணடிமையும்
மகாபாரதம் - வியாசர்
காட்டில் ஒரு மான்
சிங்கப் பெண்ணே
மீட்சிபெறும் ஆதிபுத்த அரசன் வீர சாத்தன் வரலாறு ( சாத்தப்பாடி வரலாறு)
வாழ்தல் ஒரு கலை
மனநோயாளியின் வாக்குமூலம்
உண்மைக் காதல் மாறிப்போகுமா?
வள்ளலார் வாழ்வும் நிகழ்த்திய அற்புதங்களும்
குடும்பமும் அரசியலும்
ஐந்து வருட மௌனம்
உயர்ந்த உணவு
இராமாயண காவியம்
சாதி எனும் பெருந்தொற்று: தொடரும் விவாதங்கள்
காசி முதல் இராமேஸ்வரம் வரை அனைத்திந்திய புனிதப் பயண வழிகாட்டி!
இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாள் மற்றும் படுவன்கரை குறிப்புகள்
மகாபாரதம்
புல்புல்தாரா
இளைய சமுதாயம் எழுகவே
அண்டியாபீசு
படச்சுருள் ஏப்ரல் 2021 - திராவிட சினிமாவும் சமூக நீதியும் சிறப்பிதழ்
மநு தர்ம சாஸ்திரம்
அரூபத்தின் நடனம்
இளையவர்களின் புதுக்கவிதைகள்
நிலைக்கண்ணாடியுடன் பேசுபவன்
பஞ்சபட்சி சாஸ்திரமும் ஆருடமும்
பெண் ஏன் அடிமையானாள்?
தேவை பாலியல் நீதி
மயானத்தில் நிற்கும் மரம்
பகவான் ஸ்ரீ ரமணரின் வாழ்வும் வாக்கும்
மன அமைதி பூங்காவுக்கு ஒரு நல்வாழ்க்கை பாதை
இந்தியப் பிரிவினை : உதிரத்தால் ஒரு கோடு
வன்னியர் புராணம் (மூலமும் - உரையும்)
மரணத்தை வென்ற காயகல்ப சித்தர்கள்
பச்சைத் தமிழ்த்தேசியம்
திராவிட ஆட்சி: மாற்றமும் வளர்ச்சியும்
அன்னை வயல்
அமரன்
முல்லா கதைகள்
வசந்த மனோஹரி
நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி
வானமே நம் எல்லை
நாங்கள் அவர்கள்
மந்திரப் பழத்தோட்டம்
பெண் ஏன் அடிமையானாள்?
ஆவி உலகம்
சின்னு முதல் சின்னு வரை
வாக்குமூலம்
கடவுளே என்கிறான் கடவுள்!
நேரு சிந்தனை: இலக்கும் ஏளனமும்
பிரேதாவின் பிரதிகள்
சிந்து சமவெளி சவால்
தேர்ந்தெடுத்த சுரதா கவிதைகள்
மாயவரம்: சில நினைவுகளும் சில நிகழ்வுகளும்
உலகின் நாக்கு
தெய்வங்களும் சமூக மரபுகளும்
தொலைவில் உணர்தல்
தொண்டா துவேஷமா?
மனநோய்களும் மனக்கோளாறுகளும்
உள்ளம் என்கிற கோயிலிலே
நிழல்முற்றத்து நினைவுகள்
உலகைச் சுற்றி மகிழ்வோம்
நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் எழுத்தும் பேச்சும்!
புரிந்ததும் புரியாததும்
விக்கிரமாதித்தன் கதைகள்
எழுக, நீ புலவன்! (பாரதி பற்றிய கட்டுரைகள்)
மூளைக்கு வேலை தரும் குறுக்கெழுத்துப் புதிர்கள்
வால்காவிலிருந்து கங்கை வரை
மனிதர்களை வாசிக்கிறேன்
வ.சுப. மாணிக்கம் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
வாழ்க்கைத் துணைநலம்
சிவப்புச் சின்னங்கள்
தப்புத் தப்பாய் ஒரு தப்பு
எரியாத நினைவுகள்
கடலுக்கு அப்பால்
விடுதலைப் போரில் தமிழகம் - தொகுதி 2
பார்ப்பனிய மண்ணில் மார்க்சியம்
மஞ்சள் பிசாசு (தங்கத்தின் கதை)
உதவிக்கு நீ வருவாயா?
நாகநாட்டரசி குமுதவல்லி
அடுத்த வீடு ஐம்பது மைல் 
Kmkarthi kn –
1801
மு.ராஜேந்திரன்.இ.ஆ.ப
அகநி வெளியீடு.
சென்ற ஆண்டு சாகித்ய அகாடமி விருதுக்கான போட்டியில் சூல் நாவலுக்கும் இந்த 1801 எனும் நாவலுக்கும் இடையே பலத்த போட்டியிருந்தது என்ற செய்தியின் காரணமாக ஈர்க்கப்பட்டே இந்த புத்தகத்தை வாங்கினேன். இந்த புத்தகத்தை வாசிக்க கையில் எடுக்கும் வரையிலுமே இந்த புத்தகம் எதைப்பற்றியது என அறியாதவனாகவே இருந்தேன். அதனாலயே இதை வாசிக்க இத்தனை தாமதமாகிவிட்டது.
வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கிலிடுவதிலிருந்து நாவல் ஆரம்பமாகிறது. அப்போதே நாவலின் போக்கை நமக்கு தெளிவாக உரைத்துவிடுகிறார். 1801 ம் ஆண்டு சிவகங்கைச் சீமையில் காளையார் கோயில் காட்டுக்குள் மருது சகோதரர்களுக்கும் கிழக்கிந்திய கம்பெனிக்கும் இடையே நடக்கும் யுத்தத்தை நோக்கித்தான் நாவல் நகரும் என தெளிவான பாதையை வாசகருக்குக் கடத்துவதோடு மட்டுமில்லாமல் ஒவ்வொரு அத்தியாயத்திலும் அதற்கான சொக்குப்பொடியை தூவிக்கொண்டே செல்வது தான் சிறப்பு.
இந்திய வரலாற்றில் முதல் சுதந்திரப்போர் என்றால் அது காளையார் கோவில் காட்டுக்குள் 1801ல்நடந்த போர் தான் என்கிறார். 1857ல் நடந்த சிப்பாய் கலகத்தில் மக்கள் பங்குபெறவில்லை, ஆனால் இந்தப் போரில் சிவகங்கைச் சீமையின் மொத்த மக்களும் பங்கு கொண்டனர் என்கிறார். அதற்கு ஆதாரமாக போர் முடிந்தவுடன் ஊரின் அனைத்து மக்களிடமும் இருக்கும் ஆயுதங்கள் பறிக்கப்பட்டு, இனிமேல் எந்த புரட்சியிலும் ஈடுபடமாட்டேன் என்று ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக ஒப்பந்தம் போடப்பட்டதையும் குறிப்பிடுகிறார்.
நாங்குநேரி முதல் பூனே வரை உள்ள புரட்சியாளர்களை ஒருங்கிணைத்து கம்பெனிக்கு எதிராக சின்னமருது போர் புரிந்த சம்பவத்தையும் அதற்கு சான்றாகச் சொல்கிறார். இந்த நிகழ்வுக்கு முன் இத்தனை பெரிய ஒருங்கிணைந்த போர் கம்பெனிக்கு எதிராக நடந்ததில்லை என்பதும் வரலாறு. அதுபோக போர்ப்பிரகடணம் ஒன்றையும் சின்ன மருது தயாரித்திருக்கிறார். அதாவது தாங்கள் எதற்காக போர் புரிகிறோம், தங்களின் நோக்கம் என்ன என்பதை தெளிவாக சுவரொட்டிகளின் மூலம் மக்களுக்கும் கம்பெனிக்கும் தெளிவுபடுத்தியிருக்கிறார். இந்த நிகழ்வுகளையெல்லாம் ஆதாரங்களாகக் காட்டி இது தான் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் என முரசு கொட்டுகிறார்.
வரலாறுனா வெறும் பாடபுத்தக வரலாறு மட்டுமே தெரிந்த என்னைப்போன்ற தற்குறிகளுக்கு இதன் தகவல்கள் ஒவ்வொன்றும் வைடூரியங்கள்.
1800 – 1801 ம் ஆண்டுகளுடைய நிகழ்வுகளை மட்டும் தொகுக்காமல் அந்த நிகழ்வுக்கு எதுவெல்லாம் காரணமாயிருந்தது என ஆற்காடு நாவப்பிலிருந்து துவங்கி கௌரி வல்லபர் வரை எந்த ஒரு சின்ன நிகழ்வையும் விட்டுவிடக்கூடாது என்ற ஆசிரியரின் அக்கறை ஒவ்வொரு பக்கத்திலும் தெரிகிறது.
ஆற்காடு நவாப், ஹைதர் அலி, திப்பு சுல்தான், பூலித்தேவன், கட்டபொம்மன், ஊமைத்துரை, வேலுநாச்சியார், ராமநாதபுரம் சேதுபதி, விருப்பாட்சி கோபால் நாயக்கர், திருவிதாங்கூர் சமஸ்தானம், துத்தாஜி வாக் என நாவலில் ஒட்டுமொத்த தென்னிந்தியாவின் வரலாறையும் கொண்டுவந்து மருதுபாண்டியர்களின் வாழ்க்கையோடு இணைக்கிறார். அதுவும் காவல் கோட்டம் படித்த கையோடு இதைப் படித்தால் அதன் நீட்சியாக இதை உணர்வீர்கள்.
காவல் கோட்டம் நாவலில் விஜயநகரப் பேரரசின் குரல்வளை எவ்வாறு நெரிக்கப்பட்டது என்பதைச் சொல்வதாகக் கொண்டால், இந்த 1801 நாவலில் நெரிக்கப்பட்ட குரல்வளையின் கடைசி சுவாசத்தை பதிவு செய்திருக்கிறது என்று கொள்ளலாம்.
இந்த நாவல்ல ஒரு வரி இப்படி வரும் கம்பெனி தன் படையில் வீரர்களை உருவாக்குவதை விட எதிரிகளின் படையில் துரோகிகளை விரைவிலேயே உருவாக்கி விடுகிறார்கள் என்று, அது எத்தனை பொருத்தமான வார்த்தை என்பதை வரலாறு இன்றுவரை சொல்லிக்கொண்டே இருக்கிறது. இந்த நாவலின் சில பகுதிகளோடு எனக்கு முரண்பாடுகள் இருந்தாலும் அதை புனைவு எனக் கருதி பெரிதுபடுத்தாமலும், வரலாறை முக்கியத்துவப்படுத்த எண்ணியும் சில தவறுகளையும், பிழைகளையும் சொல்லாமல் தவிர்த்திருக்கிறேன்.
கண்டிப்பாக தமிழர்கள் ஒவ்வொரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய வரலாறு என்பதால் கட்டாயம் நாவலை வாசிக்க முயற்சி செய்யுங்கள். வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே..
#Kmkarthikeyan_2020-57