1 review for அறுவடை
Add a review
You must be logged in to post a review.
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
சஞ்சாரம்
5 × ₹440.00
"இந்து மதக் கொடுகோன்மையின் வரலாறு"
4 × ₹300.00
சோழன் ராஜா ப்ராப்தி
5 × ₹140.00
நான் நாகேஷ்
2 × ₹240.00
100 சிறந்த சிறுகதைகள் (இரண்டு பாகங்கள்)
1 × ₹1,100.00
மு.க - வெறும் வாழ்க்கை வரலாறல்ல, ஒரு Scan report
1 × ₹200.00
கொடூரக் கொலை வழக்குகள்
4 × ₹175.00
'இயற்கையின் புதல்வர்’ ராமசாமி பெரியார்
1 × ₹20.00
மாபெரும் தமிழ்க் கனவு
2 × ₹470.00
நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை
1 × ₹150.00
அக்கிரகாரத்தில் பெரியார்
4 × ₹275.00
தாமஸ் வந்தார்
6 × ₹200.00
தெற்கிலிருந்து ஒரு சூரியன்
2 × ₹285.00
கலைஞர் எனும் கருணாநிதி
3 × ₹250.00
ஸ்ரீ சாய் கிருஷ்ண ஸ்ரீமத் பாகவத லீலாம்ருதம்
1 × ₹670.00
கனம் கோர்ட்டாரே!
5 × ₹275.00
வருங்கால தமிழகம் யாருக்கு?
10 × ₹170.00
ஒளியின் பெருஞ்சலனம்
1 × ₹205.00
பிரபல கொலை வழக்குகள்
15 × ₹220.00
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பெயர் அல்ல... செயல்
1 × ₹200.00
கருஞ்சூரியன்
5 × ₹80.00
லீயர் அரசன்
1 × ₹390.00
நளினி ஜமீலா
6 × ₹215.00
கடவுளும் சைத்தானும்
1 × ₹123.00
தாலிபன்
1 × ₹270.00
1000 கடல் மைல்
1 × ₹235.00
90களின் தமிழ் சினிமா
4 × ₹120.00
'இ' காமர்ஸ்: எளிய தமிழில் ஒரு வழிகாட்டி
2 × ₹110.00
தமிழக அரசியல் வரலாறு - பாகம் 1
5 × ₹450.00
THE FINAL SOLITUDE
1 × ₹380.00
வடக்கேமுறி அலிமா
1 × ₹180.00
உடலாடும் நதி
1 × ₹140.00
ரம்பையும் நாச்சியாரும்
1 × ₹100.00
மிளகாய் குண்டுகள்
1 × ₹150.00
மெதூஸாவின் மதுக்கோப்பை
1 × ₹330.00
வல்லபி
1 × ₹150.00
TALE OF FIVE CROCODILES
1 × ₹235.00
வாசிப்பது எப்படி?
1 × ₹125.00
ரோலக்ஸ் வாட்ச்
3 × ₹200.00
திராவிட இயக்க வரலாறு - பாகம் 2
2 × ₹320.00
மாவலி பதில்கள்
1 × ₹125.00
கிறித்தவமும் தமிழ்ச் சூழலும்
4 × ₹200.00
எட்டாயிரம் தலைமுறை
1 × ₹160.00
விரல்கள்
1 × ₹143.00
ரெண்டாம் ஆட்டம்
1 × ₹185.00
ஹாம்லெட்
1 × ₹430.00
காஷ்மீர் சீற்றம் பொதிந்த பார்வை
1 × ₹125.00
இன்னொருவனின் கனவு
1 × ₹210.00 Subtotal: ₹29,626.00
சஞ்சாரம்
5 × ₹440.00
"இந்து மதக் கொடுகோன்மையின் வரலாறு"
4 × ₹300.00
சோழன் ராஜா ப்ராப்தி
5 × ₹140.00
நான் நாகேஷ்
2 × ₹240.00
100 சிறந்த சிறுகதைகள் (இரண்டு பாகங்கள்)
1 × ₹1,100.00
மு.க - வெறும் வாழ்க்கை வரலாறல்ல, ஒரு Scan report
1 × ₹200.00
கொடூரக் கொலை வழக்குகள்
4 × ₹175.00
'இயற்கையின் புதல்வர்’ ராமசாமி பெரியார்
1 × ₹20.00
மாபெரும் தமிழ்க் கனவு
2 × ₹470.00
நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை
1 × ₹150.00
அக்கிரகாரத்தில் பெரியார்
4 × ₹275.00
தாமஸ் வந்தார்
6 × ₹200.00
தெற்கிலிருந்து ஒரு சூரியன்
2 × ₹285.00
கலைஞர் எனும் கருணாநிதி
3 × ₹250.00
ஸ்ரீ சாய் கிருஷ்ண ஸ்ரீமத் பாகவத லீலாம்ருதம்
1 × ₹670.00
கனம் கோர்ட்டாரே!
5 × ₹275.00
வருங்கால தமிழகம் யாருக்கு?
10 × ₹170.00
ஒளியின் பெருஞ்சலனம்
1 × ₹205.00
பிரபல கொலை வழக்குகள்
15 × ₹220.00
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பெயர் அல்ல... செயல்
1 × ₹200.00
கருஞ்சூரியன்
5 × ₹80.00
லீயர் அரசன்
1 × ₹390.00
நளினி ஜமீலா
6 × ₹215.00
கடவுளும் சைத்தானும்
1 × ₹123.00
தாலிபன்
1 × ₹270.00
1000 கடல் மைல்
1 × ₹235.00
90களின் தமிழ் சினிமா
4 × ₹120.00
'இ' காமர்ஸ்: எளிய தமிழில் ஒரு வழிகாட்டி
2 × ₹110.00
தமிழக அரசியல் வரலாறு - பாகம் 1
5 × ₹450.00
THE FINAL SOLITUDE
1 × ₹380.00
வடக்கேமுறி அலிமா
1 × ₹180.00
உடலாடும் நதி
1 × ₹140.00
ரம்பையும் நாச்சியாரும்
1 × ₹100.00
மிளகாய் குண்டுகள்
1 × ₹150.00
மெதூஸாவின் மதுக்கோப்பை
1 × ₹330.00
வல்லபி
1 × ₹150.00
TALE OF FIVE CROCODILES
1 × ₹235.00
வாசிப்பது எப்படி?
1 × ₹125.00
ரோலக்ஸ் வாட்ச்
3 × ₹200.00
திராவிட இயக்க வரலாறு - பாகம் 2
2 × ₹320.00
மாவலி பதில்கள்
1 × ₹125.00
கிறித்தவமும் தமிழ்ச் சூழலும்
4 × ₹200.00
எட்டாயிரம் தலைமுறை
1 × ₹160.00
விரல்கள்
1 × ₹143.00
ரெண்டாம் ஆட்டம்
1 × ₹185.00
ஹாம்லெட்
1 × ₹430.00
காஷ்மீர் சீற்றம் பொதிந்த பார்வை
1 × ₹125.00
இன்னொருவனின் கனவு
1 × ₹210.00 Subtotal: ₹29,626.00
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
____₹90.00
ஆர். ஷண்முகசுந்தரம் எழுதியுள்ள இருபதுக்கும் மேற்பட்ட நாவல்களில் பல ‘குறுநாவல்’ என்னும் வரையறைக்குள் அடங்குபவை. அவற்றுள் ‘அறுவடை’க்கு முக்கியமான இடம் உண்டு. பத்தாண்டுக்கும் மேல் எழுதாமல் இருந்துவிட்டுக் க.நா.சுவின் இடையறாத வற்புறுத்தலால் திரும்பவும் எழுத வந்த ஷண்முகசுந்தரம் ‘அறுவடை’யை எழுதினார். புதிதாக எழுதத் தொடங்கும் எழுத்தாளருக்குரிய உத்வேகமும் புதுமை செய்யும் உணர்வெழுச்சியும் ஒருங்கே அமையப்பெற்ற நாவலாக இது உருவாயிற்று. வட்டார மொழியும் வாழ்வியலும் இணைந்திருப்பதோடு மாந்தர்களின் மனப் போராட்டங்களை அவர் கையாண்டிருக்கும் விதமே இன்றைக்கும் இந்நாவலைப் புதுமையுடன் விளங்கச் செய்கிறது. அவரது எழுத்துக்களில் துலங்கும் ‘பெண் நோக்கு’ இந்நாவலில் வெளிப்படையாகத் தெரிகிறது. அதிகம் பேசப்பட்டிருக்க வேண்டிய இந்நாவல் குடத்துக்குள்ளிருந்து இப்போது வெளியுலகுக்கு வருகிறது. இனியேனும் இதன் வெளிச்சம் பரவ வேண்டும்.
– பெருமாள்முருகன்
Delivery: Items will be delivered within 2-7 days
You must be logged in to post a review.

Janaki Ramaraj –
வாசிப்பு அனுபவம்:
நூல்: அறுவடை
ஆசிரியர்: ஆர். சண்முக சுந்தரம்
இலக்கிய உலகிற்கு தன் சேவையை நிறுத்திக் கொண்ட பிறகு, கிட்டத்தட்ட பத்து வருட இடைவெளிக்குப் பின் க.நா.சு. அவர்களின் தொடர் ஊக்கத்தால் இந்த குறுநாவலை எழுதியதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார். 1960 ல் வெளியான இந்நாவல் கொங்கு வட்டார வழக்கை அக்காலத்திலேயே சிறப்பாக கையாண்டுள்ளது. க.நா.சு. அவர்கள் தமிழின் முதல் வட்டார நாவல் என்கிறார் இதை.
மிகச்சிறிய கதைக்களத்தில் வாழ்வியலோடு இணைந்த மனிதர்களின் வாழ்க்கையைக் காட்டுகிறது. சின்னப்ப முதலியார், எழுபது வயதைக் கடந்தும் பெண்ணாசை விடவில்லை. ஒரே மகன். கள்ளுக்கடை, நிலம் என சொத்து நிறைய சேர்த்திருக்கிறார். மனைவி இறந்த பிறகு மருமகள் ஆட்சி ஆரம்பமாகிறது. எனவே இவர் அவர்களுடன் இருப்பதில்லை. தனக்கு சொந்தமான பருத்திக்காட்டில் குடிசையில் வசிக்கிறார். மனைவி இறந்து முப்பது வருடங்களாகியும் பெண் துணை தேடுகிறார், ஒரு பெண்ணைக் கூட நிலையாக வைத்திருக்கவில்லை என பலவிதமாக ஊருக்குள் பேசுகிறார்கள். ஆனால் அதைப்பற்றியெல்லாம் அவர் வருத்தப்படுவதில்லை. “பேசுபவன் எவனாவது பொண்டாட்டி இல்லாமல் இருக்கிறானா? ” என்று கடந்து போய்விடுவார். கருப்பண்ண முதலியார், சின்னப்ப முதலியாரின் கல்யாண ஆசையை உயிர்ப்புடன் வைத்திருப்பவர். “உங்களுக்கென்ன மாமா ராஜாவாட்டம் இருக்கீங்க, ஐம்பதைத் தாண்டி உங்க வயதை யார் சொல்ல முடியும்” என்று உசுப்பேற்றிக் கொண்டிருப்பவர்.
இதில் கருப்பண்ண முதலியாருக்கும் லாபம் உண்டு. கல்யாண காரியங்களுக்கு என அடிக்கடி பணம் பெற்று கொள்வதற்கும், சின்னப்ப முதலியாருக்கு கல்யாணத்தை முடித்து விட்டால் வரும் கமிஷன் பணத்தைக் கொண்டு தன் மகன் கல்யாணத்தை முடித்து விடலாம் என்ற கணக்கு.
நாச்சிமுத்து, பனிரெண்டு வயதிருக்கும் போது சின்னப்ப முதலியாரின் கள்ளுக்கடையில் வேலைக்குச் சேர்ந்தான். இப்பொழுது வளர்ந்து பெரியாளாகி விட்டான். சீட்டு விளையாட்டு, சூதாட்டம் என பணம் சம்பாதிக்கிறான். ஒரே மகள் தேவானை. நாச்சிமுத்துவின் மனைவி இறந்துவிட அவனின் கைம்பெண் அக்கா அங்கம்மாள் தான் தேவானையை வளர்க்கிறாள். நாச்சிமுத்து வீட்டிற்கு அடிக்கடி வருவதில்லை. தன் பெண்ணிற்கு பணக்கார இடத்தில் சம்பந்தம் பேச வேண்டுமென்ற ஆசையில், அதற்கு தான் பணக்காரணாக வேண்டுமே என்ற நினைப்பில் அளவுக்கதிகமான சூதாட்டம். சில சமயம் போலீசில் இருந்து தப்பி ஓடுவதும் உண்டு.
கருப்பண்ண முதலியார் தான் சின்னப்ப முதலியாருக்குப் பேச்சுத் துணை. கருப்பண்ண முதலியார் ஒருநாள் தன்னை சின்னப்ப முதலியாரின் மருமகள் தங்களுக்கு மாப்பிள்ளை பார்ப்பதை தரக்குறைவாக பேசுவதாகவும் சீக்கிரமே கல்யாணத்தை முடித்து வருகிற பெண்ணின் பேரில் சொத்துக்களை எழுதிவிடுமாறும் கூறுகிறார்.
நாச்சிமுத்துவின் மகள் தேவானை மற்றும் சின்னப்ப முதலியாரின் பேரன் சுப்பிரமணியின் காதல் சோளக்காடு மட்டுமே அறிந்தது. யாருமறியா சோளக்காட்டில் இருவரும் காதல் வளர்க்கின்றனர். சோளக்காடு சின்னப்ப முதலியாருடையது. ஒருநாள் கருப்பண்ண முதலியார், திருப்பூர் சந்தைக்கு காடையூர்காரர் வருவார் அவர் பெண்ணை திருமணம் முடிக்க சம்மதம் பெற்று, நமது சார்பாக இருபது சவரன் நகை கொடுத்துவிடலாம் என அதற்கான பணத்தைப் பெற்றுக் கொண்டு செல்கிறார்.
வீட்டிற்கு வந்த நாச்சிமுத்து உடைந்து உட்கார்ந்திருப்பதை தேவானை பார்க்கிறாள். அத்தை அங்கம்மாள் அழுகிறாள். போலீசிடம் மாட்டிக்கொண்டதாகவும், கருப்பண்ண முதலியார் தான் அபராதத் தொகையைக் கட்டி காப்பாற்றினார் இல்லையெனில் தான் ஜெயில் தண்டனை அனுபவித்திருக்கக் கூடும் எனவும் கூறுகிறான்.
அதற்கு ஈடாக தேவானை சின்னப்ப முதலியாரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமெனவும் அவர் மொத்த சொத்துக்களையும் இவள் பேரில் எழுதி வைத்துவிடுவார் எனவும் கூறுகிறான். தேவானை கதறி அழுகிறாள். கல்யாண வேலைகள் மிகப் பிரம்மாண்டமாக நடக்கின்றன.
இறுதியில், தேவானை, சுப்பிரமணியின் காதல் என்னானது, சின்னப்ப முதலியாருடனான திருமணம் நடந்ததா என்ற திருப்புமுனையில் முடிகிறது கதை. நாம் எதிர்பார்க்காத, யூகிக்காத ஒரு முடிவு கதைக்கு. 72 பக்கங்களுக்குள் ஒரு அழகான குறுநாவல்.
ஜானகி ராமராஜ்