இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

பொன்மொழிகள்
மனமெல்லாம் மகிழ்ச்சி
சொல்லாததும் உண்மை
வந்தாரங்குடியான்
ம்
நல்லாரைக் காண்பதுவும்
எஸ்.எஸ்.தென்னரசின் தேர்ந்தெடுத்த நாவல்கள்
கொரோனாவுக்குப் பின் மாற்றுப்பாதை
திருக்குறள் மீட்டெடுப்பில் பண்டிதமணி அயோத்திதாசர் பணிகள்
அறியப்படாத தமிழகம்
பணம் சில ரகசியங்கள்
இதுவரையில்
இரண்டாவது சீதை (இரு நாவல் தொகுப்பு)
நதி போல ஓடிக்கொண்டிரு
ராஜீந்தர் சிங் பேடியின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
ஈரம் கசிந்த நிலம்
பறவைக்கோணம்
மாதவனின் அடிச்சுவட்டில்...
காகிதப்பூ தேன்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 3)
சிந்தனை விருந்து
பலன் தரும் ஸ்லோகங்கள்
ஆரிய மாயை
என் உயிர்த்தோழனே
மஹத் சத்தியாகிரகம்
தமிழகத்தின் வருவாய்
ஆதிதிராவிடர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள்
பௌத்த வேட்கை
பாரதி செல்லம்மா
கப்பல் கடல் வீடு தேசம்
உடையார் (ஆறு பாகங்களுடன்)
திருக்குறள் கலைஞர் உரை
பையன் கதைகள்
நினைவின் குட்டை கனவு நதி
டாக்டர்.கோவூரின் பகுத்தறிவு பாடங்கள்
தற்கொலை எண்ணங்களைத் தவிர்ப்பது எப்படி? இப்படி! எடுத்துப் படி!
ரோசா லுக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்
Dictionary of PHYSICS
கஷ்ட நிவாரண ஆபதுத்தாரண ஸ்ரீ மஹா காலபைரவர் ஆராதனையும் உபாஸனையும்
புறப்பாடு
பாவலரேறு பெருஞ்சித்திரனார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
கசவாளி காவியம்
ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்
தனியறை மீன்கள்
தனித்தலையும் செம்போத்து
என் ஓவியம் உங்கள் கண்காட்சி
தத்துவத்தின் வறுமை
இளவேனில் எழுத்தில் (தொகுப்பு - 2)
மருத்துவ டிப்ஸ்
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 4) கிழக்கிந்தியக் கம்பனி காலம்
பகட்டும் எளிமையும்
நெஞ்சில் ஒரு முள்
பெரியார் சந்தித்த அடக்குமுறைகள்
கலைஞரின் பெரியார் நாடு!
1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும்
திருமந்திரம் மூலமும் உரையும்
சான் ஃபிரான்ஸிஸ்கோ: ஒரு தமிழரின் பார்வையில்
ஒரு கடலோர கிராமத்தின் கதை
வாழ்வை வசப்படுத்தும் வழிகள்
பெரியார் - பழமொழிகள் பயன்மொழிகள்
சிதம்பரம் மறைஞானசம்பந்தர் அருளிய அருணகிரிப் புராணம்
பவுத்தம் : ஆரிய - திராவிடப் போரின் தொடக்கம் 


Reviews
There are no reviews yet.