இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-25)
பார்த்திபன் கனவு
சிவ புராணம்
காந்தியின் நிழலில்
கனவுகளின் மிச்சம் - ஓர் அறிவுஜீவியின் தன்வரலாறு
பொய்மான் கரடு
ருக், யஜுர், ஸாம, அதர்வண வேதங்களும் பத்து உபநிஷதங்களும்
ராணா ஹமீர்
ஆத்ம ஞானம் அருளும் கந்தரநுபூதி
பகுத்தறிவு அல்லது ஒரு கத்தோலிக்கக் குருவின் மரணசாசனம்
தெற்கு vs வடக்கு
ஞானத்தின் சிறிய புத்தகம்
கண்ணெல்லாம் உன்னோடுதான் (இரு நாவல் தொகுப்பு)
திருக்குறள் நெறியில் திருமாவின் வாழ்வியல்
சிறுவர்க்கான ஷேக்ஸ்பியர் கதைகள் பாகம் - 1
டாக்டர்.டி.எம்.நாயர் வாழ்வும் தொண்டும்
கோவில் - நிலம் - சாதி
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 9)
ரத்த ஞாயிறு (வீரசத்ரபதி சிவாஜி வரலாற்று நாவல்)
சிறிய இறகுகளின் திசைகள்
இந்தி-சமஸ்கிருதத்தைத்திணிக்கும் சமுகநீதிக்கு எதிரான புதிய கல்வி (காவி)க் கொள்கையும்! ‘நீட்’ தேர்வும்!
அவள் ஒரு பூங்கொத்து
என் சரித்திரம்
நபி பெருமானார் வரலாறு
சாதியும் சமயமும்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 8)
காலந்தோறும் பெண்
சிறுகோட்டுப் பெரும்பழம்
ஆனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் (மூன்று பாகங்கள்)
பிரேதாவின் பிரதிகள்
பவித்ரஞானேச்வரி (பாகம் - 3)
கோயிற்பூனைகள்
மீஸான் கற்கள்
பொய்த் தேவு
ஒரு கடலோர கிராமத்தின் கதை
கருவிலிருந்து கடைசி வரை சிலிர்ப்பூட்டும் சித்த மருத்துவம்
கடவுளின் கதை (பாகம் - 1) ஆதிமனிதக் கடவுள்கள் முதல் அல்லாவரை
மண்ட்டோ படைப்புகள்
பங்குக்கறியும் பின்னிரவுகளும்
சைதன்யர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
மோக முள்
தேசம்மா
மற்றாங்கே
நாடோடிகள் வாய்மொழி வரலாறும் உலகக் கண்ணோட்டமும்
சிறுவர்களுக்கு மகா பாரதக் கதை
மார்க்சியமும் மொழியியல் தேசிய இனப் பிரச்சனைகளும்
ஆதி திராவிடர் வரலாறு
பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
நிழலுக்குள் மறையும் நிலம் - (சட்டவிரோதக் குடியேறிகள்)
ஈழ விடுதலையும் திராவிடர் இயக்கமும்
பர்தா
சிறிய எண்கள் உறங்கும் அறை
ராஜ ராகம்
ஈரம் கசிந்த நிலம்
எனும்போதும் உனக்கு நன்றி
யோகநித்திரை அல்லது அறிதுயில்
இன்னா நாற்பது
ஏணிப்படிகளில் மாந்தர்கள்
சிறுகதை எழுதுவது எப்படி?
மோகனச்சிலை
சிரிப்பாலயம்
என் சரித்திரம்
பௌத்த வேட்கை
பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும்
பன்னிக்குட்டி ராமசாமியும் வண்டு முருகனும்
தலைமுறைகள்
மனமெல்லாம் மகிழ்ச்சி
மார்க்சியத்திற்கும் அஃதே துணை
உடல் - பால் - பொருள் (பாலியல் வன்முறை எனும் சமூகச்செயற்பாடு)
புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
ஞானபீடம்
அயோத்திதாசர் தொடங்கிவைத்த அறப்போராட்டம்
கொற்கை
சேரமன்னர் வரலாறு
உடன்பாடுகளும் முரண்பாடுகளும்
பொய்த் தேவு
மேல் கோட்டு
ஜென் கதைகள்
நாலடியார் (மூலமும் உரையும்)
சாதியம்: கைகூடாத நீதி
இந்து தமிழ் இயர்புக் 2021
ஞானாமிர்தம் ( சைவ சித்தாந்த ஞானத் திறவுகோல் )
பெரியார் சந்தித்த அடக்குமுறைகள்
சதுரகராதி
இன்று புதிதாய்ப் பிறப்போம்
இத்திக்காய் காயாதே
மனவெளியில் காதல் பலரூபம்
மாமூலனாரின் வரலாற்றுப் பதிவுகள் சங்கப்புலவரின் காலமும் கருத்தும்
உண்மை இதழ்: ஜனவரி - ஜுன் (முழு தொகுப்பு 2019)
கதீட்ரல் இரவாக் குறிப்புகளின் சரீரம்
நேர நெறிமுறை நிலையம்
மணல்மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு
பேதமற்ற நெஞ்சமடி 


Reviews
There are no reviews yet.