இந்து மதம் தொடர்பாக எழும் பல்வேறு வினாக்களுக்கு விடையளிக்கும் நூல். பெரும்பாலான மக்களின் கடவுள் குலதெய்வம்தானே, அவர்களை எப்படி இந்து என்று சொல்ல முடியும்? நாத்திகவாதத்துக்கும் இந்து மதத்துக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? உருவ வழிபாடு தேவையா? பிரபஞ்சத்துக்கும் மதத்துக்கும் உள்ள இணைப்பு எது? கோயில்களில் உடலுறவுச் சிலைகள் இருப்பது சரியா? கருவறையின் பூஜை மந்திரங்களாக சம்ஸ்கிருதம் இருப்பது ஏன்? இந்து மதம் தொடர்பான இவை போன்ற பல கேள்விகளுக்கு நூலாசிரியர் மிகத் தெளிவாக கூறிய பதில்களின் தொகுப்பே இந்நூல்.
சிறுதெய்வ வழிபாட்டைப் பற்றி விளக்கும்போது, “எந்தச் சிறு தெய்வமும் இந்து பொதுமரபில் எங்கோதான் இருந்து கொண்டிருக்கும். கண்டிப்பாக முற்றிலும் வெளியே இருக்காது… இந்து மதம் ஓர் எல்லையில் உயர் தத்துவமும் மறு எல்லையில் பழங்குடி நம்பிக்கைகளும் ஆசாரங்களும் நின்று கொண்டு தொடர்ச்சியாக நிகழ்த்தும் ஓர் உரையாடல்” என்கிறார் நூலாசிரியர்.
“சோழர்காலகட்டம் முதல், தமிழகத்தில் பெருமதங்கள் வேரூன்றிவிட்டிருக்கின்றன. அவற்றை ஒட்டி உருவான பிரமாண்டமான பக்தி இயக்கம், தமிழகத்தின் இன்றைய கலைகள், சிந்தனைகள், வாழ்க்கைமுறைகள் எல்லாவற்றையும் தீர்மானித்தது… பக்தி இயக்கம் பக்தியையே ஆன்மிகத்தின் ஒரே முகமாகக் காட்டியது. அந்த பக்தியும் பெருமதங்களுக்குள் நிற்கக் கூடியதாக வடிவமைத்தது” என்று இன்றைய இந்துமதத்தின் வளர்ச்சிநிலைகளைத் தெளிவாக விளக்குகிறார்.
கோயில்களில் சம்ஸ்கிருதம் வழிபாட்டு மொழியாக இருப்பது ஏன்? என்ற வினாவுக்கு, “மதம் நாடு, மொழி சார்ந்த எல்லைக்குள் நிற்பதல்ல, ஆந்திரத்து பக்தர் கன்னியாகுமரியில் வழிபட வேண்டும். கன்யாகுமரி பக்தர் பத்ரிநாத்தில் வழிபட வேண்டும். ஆகவேதான் ஒரு பொதுவழிபாட்டு மொழிக்கான தேவை ஏற்பட்டது. சம்ஸ்கிருதம் அந்த இடத்தை அடைந்து பல நூற்றாண்டுகளாகின்றது” என்று கூறுகிறார்.
“இந்து மதம், வரலாற்றில் பல்வேறு வழிபாட்டு மரபுகளும் சிந்தனைகளும் பின்னிக் கலந்து உருவாகி வந்த ஒரு பெரும் ஞானத்தொகை. அந்த ஞானத்தை முறையாக அறிவதும் அந்த அறிவின் அடிப்படையில் வாழ்க்கையை உருவாக்கிக் கொள்வதுமே ஓர் இந்துவின் கடமை” என இந்து மதம் பற்றிய புரிதலை ஒருவர் வந்தடைய இந்நூல் உதவும்.
நன்றி – தினமணி

தெனாலி ராமன் கதைகள்
பெரியாரியல் பாடங்கள் (தொகுதி – 4)
நான் மலாலா - பெண் கல்விக்காகப் போராடி தாலிபானால் சுடப்பட்ட சிறுமியின் கதை
வண்ணத்துப்பூச்சியும் பச்சைக்கிளியும் பேசிக்கொண்டது என்ன?
சோலைமலை இளவரசி
வன்னியர் தோற்றமும், வளர்ச்சியும்
திருமூலர் அருளிய திருமந்திர சாரம்
மாணிக்கவாசகர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பெரியார் டிரஸ்ட்டுகள் ஒரு திறந்த புத்தகம்
கனவைத் துரத்தும் கலைஞன்
அறியப்படாத தமிழகம்
சொலவடைகளும் சொன்னவர்களும்
குழந்தைகளை நேசிப்போம் கொண்டாடுவோம்
மகாபாரதம் அறத்தின் குரல் - மகாபாரதக் கதை முழுவதும்
உலக வரலாற்றில் பகுத்தறிவுச் சுவடுகள் (தொகுதி-1)
அந்தியில் திகழ்வது
இனிய நீதி நூல்கள்
ரோசா லுக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்
பச்சை இலைகள்
கல்லும் சொல்லும் கதைகள்
நீலக் கடல்
ஜாதி ஒழிப்புப் புரட்சி
கதைகள்
முகம் உரைக்கும் உள் நின்ற வேட்கை
புதுமைப்பித்தனுக்குத் தடை
யானை டாக்டர்
உழைக்கும் மகளிர்
அனந்தியின் டயறி
கோரா
திருவாசகம்-மூலம்
பூண்டுப் பெண்
திருவாசகம்-மூலமும் உரையும்
புதிய பொலிவு
நடந்து நடந்தே சாலை அமைத்தோம்
மூவர்
அம்பிகாபதி அமராவதி
சோசலிசம்தான் எதிர்காலம்
சிறகு முளைத்தது - ஒரு சிறுவனின் பயணம்
புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு
பொன் மகள் வந்தாள்
காற்றின் உள்ளொலிகள்
நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து
கைமேல் பலன் தரும் பரிகாரத் தலங்கள்
நிஜாமுத்தீன் அவ்லியா - ஒரு சூஃபியின் கதை
கோவைப் பிரமுகர்கள்
சம்பிரதாயங்கள் சரியா?
கதைகள் சொல்லும் கருத்துகள்(நீதிக்கதைகள்)
இனியவை நாற்பது
சோசலிசம்
வளம் தரும் விரதங்கள்
பச்சைக் கனவு
திருஞானசம்பந்தர் தேவாரம் இரண்டாம் திருமுறை
அர்தமோனவ்கள் (3 - தலைமுறைகள்)
அம்பேத்கர்
திருஞானசம்பந்தர் தேவாரம் முதல் திருமுறை
மக்கள் ஆசான் எம்.ஜி.ஆர்
டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்
லன்ச் மேப் தமிழக ஃபுட் டைரி
மரபும் புதுமையும் பித்தமும்
அகம்
வாடிவாசல்
மாயப் பெரு நதி
வாத்ஸாயனரின் காம சாஸ்திரம்
உலகிற்கு சீனா ஏன் தேவை
ஐந்து விளக்குகளின் கதை 
Reviews
There are no reviews yet.