அம்மா வந்தாள்
தி. ஜானகிராமன்
‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நியதி களுக்குக் கட்டுப்பட்டவை அல்ல. அவை உணர்ச்சிகளுக்கு வசப்படுபவை. இந்த இரண்டு கருத்தோட்டங்களின் ஈவாகவே மனித வாழ்க்கை இருக்கிறது; இருக்கும் என்பதை வலியுறுத்துகிறது கதை. இவ்விரு நிலைகளில் ஊசலாடுபவர் களாகவே முதன்மைப் பாத்திரங்கள் அமைகின்றன. இந்த ஊசலாட்டத்தை கலையாக்குகிறார் தி. ஜானகிராமன். ஆசாரங்களையும் விதிகளையும் மீறி மனிதர்களை நிர்ணயிப்பது அவர்களது உணர்வுகள்தாம் என்பதை இயல்பாகச் சொல்வதுதான் அவருடைய கலைநோக்கு. அந்த நோக்கம் உச்சமாக மிளிரும் படைப்புகளில் முதலிடம் வகிப்பது ‘அம்மா வந்தாள்’.

விதியின் சிறையில் மாவீரன்
மாடித் தோட்டம்
மகாத்மா-காந்தி-வாழ்க்கை வரலாறு
திருமேனி காரி இரத்தின கவிராயர் இயற்றிய நுண்பொருள் மாலை - திருக்குறள் பரிமேலழகர் உரை விளக்கம்
உலக கணித மேதைகள்
சந்திரமதி
புகார் நகரத்துப் பெருவணிகன்
ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்
தினம் ஒரு திருமுறை தேன் பதிகம்
குருதியுறவு
பயிற்சிகள் மற்றும் சாவியுடன் சரியான ஆங்கில இலக்கணம்
பொன்னர் - சங்கர்
சித்தர்களின் மூலிகைக் குடிநீர் மருத்துவம்
இரும்புக் குதிகால்
தடம் பதித்த தாரகைகள்
சாணக்கிய நீதி என்னும் அர்த்த சாஸ்திரம்
ஈரோடும் காஞ்சியும்
அய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்
திருக்குறளின் எளிய பொருளுரை
புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை
பட்டினத்தார் வாழ்வும் வாக்கும்
சமனற்ற நீதி
ஞானாமிர்தம்
குண்டலினி எளிய விளக்கம்
ஞானாமிர்தம் ( சைவ சித்தாந்த ஞானத் திறவுகோல் )
கம்பரசம்
இரவல் சொர்க்கம்
அறிவியல் பொது அறிவு குவிஸ்
சாமான்கள் எங்கிருந்து வருகின்றன?
ட்விட்டர் மொழி
பச்சைக் கனவு
திரிகடுகம் ஏலாதி இன்னிலை
சாண்ட்விச் புணர்தலின் ஊடல் இனிது
பணத்தோட்டம்
மிதக்கும் வரை அலங்காரம்
சிறகு முளைத்தது - ஒரு சிறுவனின் பயணம்
அராஜகவாதமா? சோசலிசமா?
கமலி
மரபும் புதுமையும் பித்தமும்
சபரிமலை யாத்திரை (ஒரு வழிகாட்டி)
டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்
உலகிற்கு சீனா ஏன் தேவை
காம சூத்திரம்
அந்தக் காலம் மலையேறிப்போனது
பொன் மகள் வந்தாள்
அந்த நேரத்து நதியில்...
சந்திரகிரி ஆற்றங்கரையில் 


அம்மு ராகவ் –
#அம்மா_வந்தாள்
#திஜானகிராமன்
வேதத்தை தவிர வெளியுலகம்
எதுவும் தெரியாமல் வளர்ந்துவிட்டு, அம்மா, தோழி
என்று இரு பெண்களின் மனஉணர்வுகளுக்கிடையே சிக்கித் தவிக்கும் அப்பு….
நானாவது உன்னையே நினைச்சுட்டு சாகறேன்,
உங்கம்மா யாரையோ நினைச்சுட்டு சாகாம இருக்கா என்று கதறும்…
சிறுவயதிலிருந்தே அப்புவை நேசித்துக்கொண்டிருக்கும் கைம்பெண்ணான இந்து.
தன் மனைவியையே ஒரு முறையாவது இவளை கட்டியாள வேண்டும்னு நினைக்கிற தண்டபானி…
கணவனானாலும் சரி, சிவசுவானாலும் சரி எவனும் தன்னை ஆள முடியாது என தானே தன்னை ஆளும் பெண்ணாக, கம்பீரமாக நிற்கும் அழகான ஆளுமை அலங்காரம்…
ஒரு பெண்ணை ஆள வேண்டுமென எவன் நினைக்கிறானோ, அவனை அப்பெண் ஆண்டுகொண்டிருக்கிறாள்…அதுதான் உண்மை.
ஒரு கட்டத்தில் கணவனுடனான தாம்பத்தியத்தை நிறுத்திக் கொள்ள, போறும்னா போறும்தான்…என்று
60 களிலேயே தன் கணவனை பார்த்து No means No என்று சொல்ல ஒரு பெண்ணுக்கு எவ்வளவு துணிச்சல் வேண்டும். அலங்காரம் மட்டுமல்ல தி.ஜா வின் கதாநாயகிகள் ஒவ்வொருவரும்
பிரம்மிக்க வைக்கிறார்கள் என்னை…..
#அம்முராகவ்