இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

திருக்காஞ்சி முதல் திருவண்ணாமலை வரை
மோகினித் தீவு
கேள்வியின் பதில் என்னவோ?
காதல்: சிகப்பு காதல்...
சாதுவான பாரம்பரியம்
தோன்றியதென் சிந்தைக்கே..
மரநாய்
பாணர் வகையறா
மகாபாரதத்தில் வர்ண(அ) தர்மமும் பெண்ணடிமையும்
புதுமைப் பித்தம்: வாசகத் தொகைநூல் 3
பெரியாழ்வார் (இந்திய இலக்கியச் சிற்பிகள் )
ஜாதியை அழித்தொழிக்கும் வழி
தேசபக்தி என்னும் சூழ்ச்சி
புனைவு
மரிக்கொழுந்து, கற்பகம், அழகம்மாள் மற்றும் சில பெண்கள்
அறம்
கிழிபடும் காவி அரசியல்
பவித்ரஞானேச்வரி (பாகம் - 2)
சிறுகோட்டுப் பெரும் பழம்
காமஞ்சரி
கலைஞரின் பேனா எழுதியதும்... சாதித்ததும்...
அன்பே ஆரமுதே
மோகத்திரை
மோக முள்
இராஜேந்திர சோழன்
பெரியார் கருவூலம்
காதலின் புதிய தடம்
அயோத்திதாசப் பண்டிதர்: தமிழ்த் தேசிய உணர்வின் முன்னோடி தமிழன்
பௌத்த வேட்கை
இதய ரோஜா
இலக்கியத்தில் விருந்தோம்பல்
கோபல்ல கிராமம்
நினைவுகளின் பேரலைகள்
பொய்த் தேவு
நாத்திகனின் பிரார்த்தனைகள்
இந்தி-சமஸ்கிருதத்தைத்திணிக்கும் சமுகநீதிக்கு எதிரான புதிய கல்வி (காவி)க் கொள்கையும்! ‘நீட்’ தேர்வும்!
மனப்போர்
தந்தை பெரியாரின் சமூகநீதிச் சிந்தனைகள்
நாயகன் - கார்ல் மார்க்சு
அவஸ்தை (சிறுகதைகள்)
இரவுக்கு முன்பு வருவது மாலை
இயற்கையின் விலை என்ன ?
பெரியாரியம் - கடவுள் (உரைக்கோவை-3)
ராஜமுத்திரை (இரண்டு பாகங்களுடன்)
தமிழ்நாடன் ( இந்திய இலக்கியச் சிற்பிகள்)
வசந்தத்தைத் தேடி
நிச்சயதார்த்தம்
WHY WERE WOMEN ENSLAVED?
புரோகிதர் ஆட்சி
ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்
ஆவி உலகம்
உன் கையில் நீர்த்திவலை
பறவைகள் நிரம்பிய முன்னிரவு
என் ஓவியம் உங்கள் கண்காட்சி
உன் பார்வை ஒரு வரம்
மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்
நாயகன் - அம்பேத்கர்
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்
அருணாசல புராணம்
பிரம்ம சூத்திரம்
அசல் மனுதரும சாஸ்திரம் (1919 பதிப்பில் உள்ளபடி)
டானியல் அன்ரனி: சிறுகதைகள் | அதிர்வுகள் | கவிதைகள்
திருக்குறள் நீதி கதைகள்
உண்மை இதழ்: ஜனவரி - ஜுன் (முழு தொகுப்பு 2019)
அரண்மனை ரகசியம்
கருத்தாயுதம்
வலசைப் பறவை
அசோகவனம் அல்லது வேலிகளின் கதை
ஆரிய மாயை
யாசுமின் அக்கா
உழைப்பவனுக்கும் உற்சாகம்
இராவணன் வித்தியாதரனா?
அன்புள்ள ஏவாளுக்கு
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (பாகம்-6)
பிரதமன்
நெருங்கி வரும் இடியோசை
சிறகு முளைத்தது - ஒரு சிறுவனின் பயணம்
உற்சாக டானிக்
தீராப் பகல்
தமிழகத்துக்கு அப்பால் தமிழ் - தமிழின் உலகளாவிய பரிமாணமும் பரிணாமமும்
கம்பன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ததாகம்
பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள் (தொகுதி -1)
மார்க்ஸ் எங்கெல்ஸ் பற்றிய நினைவு குறிப்புகள்
கனாமிஹிர் மேடு
தமிழ் வாழும் வரை தமிழ் ஒளி வாழ்வார்
செங்கிஸ்கான்: வரலாற்று புதினம்
உரிமைகளின் காவலன்
யாக முட்டை
லிபரல் பாளையத்து கதைகள்
திருமந்திரம் மூலமும் உரையும்
யோகநித்திரை அல்லது அறிதுயில்
சிறுதானிய உணவு வகைகள்
பயம் தவிர்ப்போம்
நற்றிணை மூலமும் விளக்கவுரையும் (பாகம் 1) 


Reviews
There are no reviews yet.