1801 – நாவல்
இந்திய சுதந்திர வரலாற்றில் விடுதலை எழுச்சிக்கான முதல் குரல் தென்னகத்தில்தான் ஒலித்தது. ஒலிக்கச் செய்தவர்கள் பூலித்தேவர், திப்பு சுல்தான், கட்டபொம்மன், தூந்தாஜி வாக், மருது பாண்டியர்கள், ஊமைத்துரை, விருப்பாச்சி கோபால் நாய்க்கர், தீரன் சின்னமலை உள்ளிட்ட போராளிகளே.
தென்னிந்தியாவின் போராளிகளை ஒன்று திரட்டி மருது சகோதரர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக 1801-ஆம் ஆண்டு நடத்திய போராட்டமே இந்திய விடுதலைப் போராட்டத்தின் தொடக்கமாகும். ஆங்கிலேயர்கள் மிக அதிகமான மனித இழப்புகளை சந்தித்ததும் இந்தப் போர்க்களத்தில்தான். இந்திய விடுதலைப் போராட்டக்காரர்கள் முதன்முதலில் நாடுகடத்தப்பட்டதும் இப்போரில் தான்.
உலகம் முழுக்க நடந்த விடுதலைப் போர்களின் விழுச்சிக்குப் பல காரணங்கள் இருந்துள்ளன. தென்னிந்திய விடுதலைப் புரட்சியின் வீழ்ச்சிக்குக் காரணமாய் அமைந்தது சில தனி நபர்களின் துரோகம் மட்டுமே. சில நூறு பணங்கள், சிறு துண்டு நிலம், ஆசை வார்த்தைகள், அதிகாரத்தில் பங்கு, ஆட்சியில் பங்கு என ஆங்கிலேயர்கள் விரித்த வலையில் விழுந்து துரோகிகளாக மாற ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம்.
முதல் இந்திய சுந்தந்திரப் போரின் எழுச்சி, வீழ்ச்சி, 18 – ஆம் நூற்றாண்டு மக்களின் வாழ்க்கை, பிரிட்டிஷ் இந்தியக் கால தமிழகம், ஆங்கிலேயர்களின் இந்திய வாழ்க்கை எனப் பல்வேறு கதைக்களன்கள் விவரிக்கப்பட்ட நாவலே ’1801.

முஸ்லிம் அடையாளம்- இந்துத்துவ அரசியல்
மகாபாரதம்
சைவ சித்தாந்த விளக்கம்
பெரியார் ஒரு வாழ்க்கைப் பாடம்
ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்வது எப்படி?
பால காண்டம்
இறவா சித்தரின் சிரஞ்சீவி மருத்துவம்
பேரறிஞர் பெர்ட்ரண்ட் ரசல்
பதிற்றுப்பத்து
அண்டியாபீசு
மகா பிராமணன்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-1)
வந்ததும் வாழ்வதும்
நீராம்பல்
அகவிழி திறந்து
பவித்ரஞானேச்வரி ( பாகம் - 1)
தேவதைகள் சூனியக்காரிகள் பெண்கள்
சிவகாமியின் சபதம் - நான்கு பாகங்களின் சுருக்கம்
இரண்டு சகோதரர்களின் நெடும் பயணம்
அமரன்
மாப்பசான் சிறுகதைகள்
திறனாய்வும் கோட்பாடும்
அள்ள அள்ளப் பணம் 6 - மியூச்சுவல் ஃபண்ட்
வணக்கம்
தொல்லியல் பார்வையில் சோழப்பேரரசி சோழமாதேவி கைலாயமுடையார் திருக்கோவில்
பிரசாதம்
ஒற்றறிதல்
மாண்புமிகு முதலமைச்சர் (வரலாற்று நாவல்)
வைக்கம் போராட்ட வரலாறு
வில்லி பாரதம் (பாகம் - 3)
சைதன்யர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பொய்யும் வழுவும்
காற்றின் நிறம் சிவப்பு
ஜனனப் பிரபந்த ஜோதிடம்
வால்மீகி இராமாயணம் (முழுவதும்)
கடவுளின் கதை (பாகம் - 5) முதலாளி யுகத்தின் இரண்டாம் நூற்றாண்டு
எனக்கு நிலா வேண்டும்
ஏழாம் வானத்து மழை
கோரிக்கைகள் நிறைவேற்றும் கோயில்கள்
நேர நெறிமுறை நிலையம்
ராமாயணம் எத்தனை ராமாயணம்
பெரியார் களஞ்சியம் – குடிஅரசு (தொகுதி-14)
வள்ளல் இராமலிங்கர் : வாழ்வும் வாக்கும்
ஜப்பான் – ஒரு கிற்றோவியம்
வனவாசி
ஒரு நூற்றாண்டில் தமிழகம் கண்ட போராட்டங்கள்
சூரிய வம்சம்
என்னைத் திற எண்ணம் அழகாகும்
ரோல் மாடல்
கனவு ஆசிரியர்
காந்தியின் நிழலில்
பல்லவர் வரலாறு
வயது வந்தவர்களுக்கு மட்டும்
அப்புறம் என்பது எப்போதும் இல்லை
விடுதலைப் போரில் தமிழகம் - தொகுதி 2
உதவிக்கு நீ வருவாயா?
மனமெல்லாம் மகிழ்ச்சி
அற்புதமான களஞ்சியம்
மறைய மறுக்கும் வரலாறு
வணக்கம் துயரமே
வடநாட்டில் பெரியார் (பாகம் - 2)
பெண்ணுக்கு வேண்டாம் பெண்மை!
திருமலை திருப்பதி அரிய தகவல்கள்
அரூபத்தின் நடனம்
அறியப்படாத தமிழ்நாடு
சிங்கமும் முயலும்
தப்புத் தாளங்கள்
மணல்மேல் கட்டிய பாலம்
நற்றிணை மூலமும் விளக்கவுரையும் (பாகம் 2)
வாழ்க்கைத் துணைநலம்
தந்தை பெரியாரின் முக்கிய நேர்காணல்கள்
டெஸ்ட் எடு கொண்டாடு
சிறிய எண்கள் உறங்கும் அறை
தன்னை அறிதல் இன்னொரு வாழ்க்கை
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-9)
விக்கிரமாதித்தன் கதைகள்
நான் எனும் பேரதிசயம் (வாழ்வைக் கொண்டாடலாம்)
மலை அரசி
தென்றல் காற்று (வரலாற்று நாவல்)
மண்ணின் மைந்தர்களின் மறைக்கப்பட்ட வரலாறு
கோயில்கள் தோன்றியது ஏன்?
ராமாபாய் (அண்ணலின் ஆன்மா)
பெண் மணம்
போர் இல்லாத இருபது நாட்கள்
மனு சாஸ்திரத்தை எரிக்க வேண்டும் ஏன்?
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-2)
பன்னிரு ஆழ்வார்கள்
ஆதிச்சநல்லூர் வழக்கு எண் 13096/2017
வித்தியாச ராமாயணம்
மீனின் சிறகுகள்
தேன் இனிப்பது எல்லோருக்கும் தெரியாது
அரசியல் சிந்தனையாளர் புத்தர்
இந்து சமய தத்துவங்கள் ஐநூறு
உப்புச்சுமை
உயர்ந்த உணவு
சிறுவர்க்கான ஷேக்ஸ்பியர் கதைகள் பாகம் - 3
மூவர்
அம்பை கதைகள்
ஓஷோ 1000 ஒரு ஞானியின் தீர்க்க தரிசனம்...
கச்சத்தீவும் இந்திய மீனவரும்
ஈரம் கசிந்த நிலம்
சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை
மன நலமே மாமருந்து
மலரும் நினைவுகள்
மூன்று சகோதரர்களும் தந்தையின் புதையலும்
வா தமிழா! பொருளாதாரம் பயில்வோம்...
சட்டப்படி நாம் இன்னும் சூத்திரரே!
யதி
மண்ட்டோ படைப்புகள்
காட்டில் ஒரு மான்
நமக்கு ஏன் இந்த இழிநிலை?
பித்தனாரும் பூங்குன்றன் விளாதிமிரும்
தீர்ப்பு?
தமிழாராய்ச்சியின் வளர்ச்சி
கூத்துக்கலைஞர் உருவாக்கம்
தாமஸ் ஆல்வா எடிசன்
தெருவென்று எதனைச் சொல்வீர்
நீண்ட காத்திருப்பு
ஒரு மாலையும் இன்னொரு மாலையும்
யூதாஸின் நற்செய்தி
ஆவி உலகம் 
Kmkarthi kn –
1801
மு.ராஜேந்திரன்.இ.ஆ.ப
அகநி வெளியீடு.
சென்ற ஆண்டு சாகித்ய அகாடமி விருதுக்கான போட்டியில் சூல் நாவலுக்கும் இந்த 1801 எனும் நாவலுக்கும் இடையே பலத்த போட்டியிருந்தது என்ற செய்தியின் காரணமாக ஈர்க்கப்பட்டே இந்த புத்தகத்தை வாங்கினேன். இந்த புத்தகத்தை வாசிக்க கையில் எடுக்கும் வரையிலுமே இந்த புத்தகம் எதைப்பற்றியது என அறியாதவனாகவே இருந்தேன். அதனாலயே இதை வாசிக்க இத்தனை தாமதமாகிவிட்டது.
வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கிலிடுவதிலிருந்து நாவல் ஆரம்பமாகிறது. அப்போதே நாவலின் போக்கை நமக்கு தெளிவாக உரைத்துவிடுகிறார். 1801 ம் ஆண்டு சிவகங்கைச் சீமையில் காளையார் கோயில் காட்டுக்குள் மருது சகோதரர்களுக்கும் கிழக்கிந்திய கம்பெனிக்கும் இடையே நடக்கும் யுத்தத்தை நோக்கித்தான் நாவல் நகரும் என தெளிவான பாதையை வாசகருக்குக் கடத்துவதோடு மட்டுமில்லாமல் ஒவ்வொரு அத்தியாயத்திலும் அதற்கான சொக்குப்பொடியை தூவிக்கொண்டே செல்வது தான் சிறப்பு.
இந்திய வரலாற்றில் முதல் சுதந்திரப்போர் என்றால் அது காளையார் கோவில் காட்டுக்குள் 1801ல்நடந்த போர் தான் என்கிறார். 1857ல் நடந்த சிப்பாய் கலகத்தில் மக்கள் பங்குபெறவில்லை, ஆனால் இந்தப் போரில் சிவகங்கைச் சீமையின் மொத்த மக்களும் பங்கு கொண்டனர் என்கிறார். அதற்கு ஆதாரமாக போர் முடிந்தவுடன் ஊரின் அனைத்து மக்களிடமும் இருக்கும் ஆயுதங்கள் பறிக்கப்பட்டு, இனிமேல் எந்த புரட்சியிலும் ஈடுபடமாட்டேன் என்று ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக ஒப்பந்தம் போடப்பட்டதையும் குறிப்பிடுகிறார்.
நாங்குநேரி முதல் பூனே வரை உள்ள புரட்சியாளர்களை ஒருங்கிணைத்து கம்பெனிக்கு எதிராக சின்னமருது போர் புரிந்த சம்பவத்தையும் அதற்கு சான்றாகச் சொல்கிறார். இந்த நிகழ்வுக்கு முன் இத்தனை பெரிய ஒருங்கிணைந்த போர் கம்பெனிக்கு எதிராக நடந்ததில்லை என்பதும் வரலாறு. அதுபோக போர்ப்பிரகடணம் ஒன்றையும் சின்ன மருது தயாரித்திருக்கிறார். அதாவது தாங்கள் எதற்காக போர் புரிகிறோம், தங்களின் நோக்கம் என்ன என்பதை தெளிவாக சுவரொட்டிகளின் மூலம் மக்களுக்கும் கம்பெனிக்கும் தெளிவுபடுத்தியிருக்கிறார். இந்த நிகழ்வுகளையெல்லாம் ஆதாரங்களாகக் காட்டி இது தான் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் என முரசு கொட்டுகிறார்.
வரலாறுனா வெறும் பாடபுத்தக வரலாறு மட்டுமே தெரிந்த என்னைப்போன்ற தற்குறிகளுக்கு இதன் தகவல்கள் ஒவ்வொன்றும் வைடூரியங்கள்.
1800 – 1801 ம் ஆண்டுகளுடைய நிகழ்வுகளை மட்டும் தொகுக்காமல் அந்த நிகழ்வுக்கு எதுவெல்லாம் காரணமாயிருந்தது என ஆற்காடு நாவப்பிலிருந்து துவங்கி கௌரி வல்லபர் வரை எந்த ஒரு சின்ன நிகழ்வையும் விட்டுவிடக்கூடாது என்ற ஆசிரியரின் அக்கறை ஒவ்வொரு பக்கத்திலும் தெரிகிறது.
ஆற்காடு நவாப், ஹைதர் அலி, திப்பு சுல்தான், பூலித்தேவன், கட்டபொம்மன், ஊமைத்துரை, வேலுநாச்சியார், ராமநாதபுரம் சேதுபதி, விருப்பாட்சி கோபால் நாயக்கர், திருவிதாங்கூர் சமஸ்தானம், துத்தாஜி வாக் என நாவலில் ஒட்டுமொத்த தென்னிந்தியாவின் வரலாறையும் கொண்டுவந்து மருதுபாண்டியர்களின் வாழ்க்கையோடு இணைக்கிறார். அதுவும் காவல் கோட்டம் படித்த கையோடு இதைப் படித்தால் அதன் நீட்சியாக இதை உணர்வீர்கள்.
காவல் கோட்டம் நாவலில் விஜயநகரப் பேரரசின் குரல்வளை எவ்வாறு நெரிக்கப்பட்டது என்பதைச் சொல்வதாகக் கொண்டால், இந்த 1801 நாவலில் நெரிக்கப்பட்ட குரல்வளையின் கடைசி சுவாசத்தை பதிவு செய்திருக்கிறது என்று கொள்ளலாம்.
இந்த நாவல்ல ஒரு வரி இப்படி வரும் கம்பெனி தன் படையில் வீரர்களை உருவாக்குவதை விட எதிரிகளின் படையில் துரோகிகளை விரைவிலேயே உருவாக்கி விடுகிறார்கள் என்று, அது எத்தனை பொருத்தமான வார்த்தை என்பதை வரலாறு இன்றுவரை சொல்லிக்கொண்டே இருக்கிறது. இந்த நாவலின் சில பகுதிகளோடு எனக்கு முரண்பாடுகள் இருந்தாலும் அதை புனைவு எனக் கருதி பெரிதுபடுத்தாமலும், வரலாறை முக்கியத்துவப்படுத்த எண்ணியும் சில தவறுகளையும், பிழைகளையும் சொல்லாமல் தவிர்த்திருக்கிறேன்.
கண்டிப்பாக தமிழர்கள் ஒவ்வொரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய வரலாறு என்பதால் கட்டாயம் நாவலை வாசிக்க முயற்சி செய்யுங்கள். வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே..
#Kmkarthikeyan_2020-57