1801 – நாவல்
இந்திய சுதந்திர வரலாற்றில் விடுதலை எழுச்சிக்கான முதல் குரல் தென்னகத்தில்தான் ஒலித்தது. ஒலிக்கச் செய்தவர்கள் பூலித்தேவர், திப்பு சுல்தான், கட்டபொம்மன், தூந்தாஜி வாக், மருது பாண்டியர்கள், ஊமைத்துரை, விருப்பாச்சி கோபால் நாய்க்கர், தீரன் சின்னமலை உள்ளிட்ட போராளிகளே.
தென்னிந்தியாவின் போராளிகளை ஒன்று திரட்டி மருது சகோதரர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக 1801-ஆம் ஆண்டு நடத்திய போராட்டமே இந்திய விடுதலைப் போராட்டத்தின் தொடக்கமாகும். ஆங்கிலேயர்கள் மிக அதிகமான மனித இழப்புகளை சந்தித்ததும் இந்தப் போர்க்களத்தில்தான். இந்திய விடுதலைப் போராட்டக்காரர்கள் முதன்முதலில் நாடுகடத்தப்பட்டதும் இப்போரில் தான்.
உலகம் முழுக்க நடந்த விடுதலைப் போர்களின் விழுச்சிக்குப் பல காரணங்கள் இருந்துள்ளன. தென்னிந்திய விடுதலைப் புரட்சியின் வீழ்ச்சிக்குக் காரணமாய் அமைந்தது சில தனி நபர்களின் துரோகம் மட்டுமே. சில நூறு பணங்கள், சிறு துண்டு நிலம், ஆசை வார்த்தைகள், அதிகாரத்தில் பங்கு, ஆட்சியில் பங்கு என ஆங்கிலேயர்கள் விரித்த வலையில் விழுந்து துரோகிகளாக மாற ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம்.
முதல் இந்திய சுந்தந்திரப் போரின் எழுச்சி, வீழ்ச்சி, 18 – ஆம் நூற்றாண்டு மக்களின் வாழ்க்கை, பிரிட்டிஷ் இந்தியக் கால தமிழகம், ஆங்கிலேயர்களின் இந்திய வாழ்க்கை எனப் பல்வேறு கதைக்களன்கள் விவரிக்கப்பட்ட நாவலே ’1801.

நிலைக்கண்ணாடியுடன் பேசுபவன்
உலகின் கடைசி மனிதன்
வாழ்வே ஒரு மந்திரம்
தமிழகப் பாறை ஓவியங்கள்
கலைஞரின் நெஞ்சுக்கு நீதி ஓர் அறிமுகம்
மூமின்
உயரப் பறத்தல்
ஜெயகாந்தன் கதைகள்
காலி கோப்பையும் தானாய் நிரம்பும் தேநீரும்
வாராணசி
வாழ்வியல் நெறிகள்
நிழல் படம் நிஜப் படம்
தமிழ்நாட்டு இந்து சமயங்களின் வரலாறு
நாயக்கர் காலம் - ஓர் அறிமுகம்
முக்தி தரும் பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்கள்
வள்ளல் இராமலிங்கர் : வாழ்வும் வாக்கும்
என் சரித்திரம்
துளசி பூஜா விதிகளும அர்ச்சனையும்
பெரிய புராண ஆராய்ச்சி
துயர் நடுவே வாழ்வு
நான் உங்கள் ரசிகன்
மனு சாஸ்திரத்தை எரிக்க வேண்டும் ஏன்?
ஏமாளி
புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
நித்ய கன்னி
சிந்தனைக்குத் தெளிவு தரும் சித்தர் பாடல்கள்
பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?
இந்தியா 1944 - 48
கலைஞர் மேல் காதல் கொண்டேன்
கதவு திறந்தததும் கடல்
மனோரஞ்சிதம்
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 4)
பூ மகள் வந்தாள்
இந்திய குற்ற விசாரணை நடைமுறைச் சட்டங்கள்
தாய்ப்பால்
இந்திய நாத்திகம்
சர் ஏ.டி.பன்னீர் செல்வம்
மனப்போர்
கரியோடன்
தப்புத் தாளங்கள்
மகாத்மா காந்தி படுகொலை: புதிய உண்மைகள்
டாக்டர்.டி.எம்.நாயர் வாழ்வும் தொண்டும்
உலகை ஆளும் மந்திரம்
உடன்பாடுகளும் முரண்பாடுகளும்
இலட்சியத்தை நோக்கி
கடலுக்கு அப்பால்
அந்தரமீன்
பிசினஸ் டிப்ஸ்
கௌஜின் ஜியாங்கின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
மத்தி
நீல நாயின் கண்கள்
கடவுளின் கதை (பாகம் - 1) ஆதிமனிதக் கடவுள்கள் முதல் அல்லாவரை
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 4)
ஒரு பிரயாணம் ஒரு கொலை
தலித்துகள் – நேற்று இன்று நாளை
அம்பேத்கரின் உலகம்
திராவிட நாடு நாட்டமும் நாடாமையும்
என்ன செய்ய வேண்டும்?
சுயமரியாதை சூழ் உலகு: நிர்மாணப் பணியும் அணியும் - புதுவை சிவத்தின் எழுத்தியக்கம்
அனல் ஹக்
ஏழாம் வானத்து மழை
நாவல் பழ இளவரசியின் கதை
போயிட்டு வாங்க சார்
என் நாடு என் மக்கள் எனது போராட்டம்
பெரியாரும் பிற நாட்டு நாத்திக அறிஞர்களும்
புல்புல்தாரா
மொழிப் போராட்டம்
பசித்த மானிடம்
ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்
கணிதமேதை இராமானுஜம்
மீஸான் கற்கள்
பெண் மணம்
மஹத் சத்தியாகிரகம்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-2)
மரி என்கிற ஆட்டுக்குட்டி
இதுதான் ராமராஜ்யம்
இலக்கிய வரலாறு
நெஞ்சில் ஒரு முள்
ஞானத்தின் சிறிய புத்தகம்
அறிந்ததினின்றும் விடுதலை
அண்ணல் அம்பேத்கர் முன்னுரைகள்
ஐஸ்வர்யம் தரும் விரதங்களும் பூஜைகளும்
எழுத்து இதழ்த் தொகுப்பு (1959-1963) - சி.சு. செல்லப்பா படைப்புகள்
மகாபாரதம் - வியாசர்
கடல் புறா (மூன்று பாகங்கள்)
காதல்: சிகப்பு காதல்...
முமியா: சிறையும் வாழ்வும்
வாசிப்பது எப்படி?
SM - G615F - என்கிற செயற்கை உளவாளிக்குத் தெரிந்த ஏழு காரணங்கள்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-3)
சிதம்பர ரகசியம்
அழியாத கோலங்கள்
அடுத்த வீடு ஐம்பது மைல்
பயம் தவிர்ப்போம்
அஞ்சா நெஞ்சன்
பெரியார் ஈ.வெ.ரா (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பேரருவி
வந்தேமாதரம் பிள்ளையும் வைக்கம் போராட்ட வீரரும்
மணிக்கொடி மரபும் பாரதிதாசனும்
உலகப் புகழ்பெற்ற தஸ்தயேவ்ஸ்கி கதைகள்
திருக்குறளில் இந்து சனாதன மறுப்பு
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி – 3)
திட்டமிட்ட திருப்பம்
தமிழகத்தின் வருவாய்
உயிர் வளர்க்கும் திருமந்திரம் - PART - II 
Kmkarthi kn –
1801
மு.ராஜேந்திரன்.இ.ஆ.ப
அகநி வெளியீடு.
சென்ற ஆண்டு சாகித்ய அகாடமி விருதுக்கான போட்டியில் சூல் நாவலுக்கும் இந்த 1801 எனும் நாவலுக்கும் இடையே பலத்த போட்டியிருந்தது என்ற செய்தியின் காரணமாக ஈர்க்கப்பட்டே இந்த புத்தகத்தை வாங்கினேன். இந்த புத்தகத்தை வாசிக்க கையில் எடுக்கும் வரையிலுமே இந்த புத்தகம் எதைப்பற்றியது என அறியாதவனாகவே இருந்தேன். அதனாலயே இதை வாசிக்க இத்தனை தாமதமாகிவிட்டது.
வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கிலிடுவதிலிருந்து நாவல் ஆரம்பமாகிறது. அப்போதே நாவலின் போக்கை நமக்கு தெளிவாக உரைத்துவிடுகிறார். 1801 ம் ஆண்டு சிவகங்கைச் சீமையில் காளையார் கோயில் காட்டுக்குள் மருது சகோதரர்களுக்கும் கிழக்கிந்திய கம்பெனிக்கும் இடையே நடக்கும் யுத்தத்தை நோக்கித்தான் நாவல் நகரும் என தெளிவான பாதையை வாசகருக்குக் கடத்துவதோடு மட்டுமில்லாமல் ஒவ்வொரு அத்தியாயத்திலும் அதற்கான சொக்குப்பொடியை தூவிக்கொண்டே செல்வது தான் சிறப்பு.
இந்திய வரலாற்றில் முதல் சுதந்திரப்போர் என்றால் அது காளையார் கோவில் காட்டுக்குள் 1801ல்நடந்த போர் தான் என்கிறார். 1857ல் நடந்த சிப்பாய் கலகத்தில் மக்கள் பங்குபெறவில்லை, ஆனால் இந்தப் போரில் சிவகங்கைச் சீமையின் மொத்த மக்களும் பங்கு கொண்டனர் என்கிறார். அதற்கு ஆதாரமாக போர் முடிந்தவுடன் ஊரின் அனைத்து மக்களிடமும் இருக்கும் ஆயுதங்கள் பறிக்கப்பட்டு, இனிமேல் எந்த புரட்சியிலும் ஈடுபடமாட்டேன் என்று ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக ஒப்பந்தம் போடப்பட்டதையும் குறிப்பிடுகிறார்.
நாங்குநேரி முதல் பூனே வரை உள்ள புரட்சியாளர்களை ஒருங்கிணைத்து கம்பெனிக்கு எதிராக சின்னமருது போர் புரிந்த சம்பவத்தையும் அதற்கு சான்றாகச் சொல்கிறார். இந்த நிகழ்வுக்கு முன் இத்தனை பெரிய ஒருங்கிணைந்த போர் கம்பெனிக்கு எதிராக நடந்ததில்லை என்பதும் வரலாறு. அதுபோக போர்ப்பிரகடணம் ஒன்றையும் சின்ன மருது தயாரித்திருக்கிறார். அதாவது தாங்கள் எதற்காக போர் புரிகிறோம், தங்களின் நோக்கம் என்ன என்பதை தெளிவாக சுவரொட்டிகளின் மூலம் மக்களுக்கும் கம்பெனிக்கும் தெளிவுபடுத்தியிருக்கிறார். இந்த நிகழ்வுகளையெல்லாம் ஆதாரங்களாகக் காட்டி இது தான் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் என முரசு கொட்டுகிறார்.
வரலாறுனா வெறும் பாடபுத்தக வரலாறு மட்டுமே தெரிந்த என்னைப்போன்ற தற்குறிகளுக்கு இதன் தகவல்கள் ஒவ்வொன்றும் வைடூரியங்கள்.
1800 – 1801 ம் ஆண்டுகளுடைய நிகழ்வுகளை மட்டும் தொகுக்காமல் அந்த நிகழ்வுக்கு எதுவெல்லாம் காரணமாயிருந்தது என ஆற்காடு நாவப்பிலிருந்து துவங்கி கௌரி வல்லபர் வரை எந்த ஒரு சின்ன நிகழ்வையும் விட்டுவிடக்கூடாது என்ற ஆசிரியரின் அக்கறை ஒவ்வொரு பக்கத்திலும் தெரிகிறது.
ஆற்காடு நவாப், ஹைதர் அலி, திப்பு சுல்தான், பூலித்தேவன், கட்டபொம்மன், ஊமைத்துரை, வேலுநாச்சியார், ராமநாதபுரம் சேதுபதி, விருப்பாட்சி கோபால் நாயக்கர், திருவிதாங்கூர் சமஸ்தானம், துத்தாஜி வாக் என நாவலில் ஒட்டுமொத்த தென்னிந்தியாவின் வரலாறையும் கொண்டுவந்து மருதுபாண்டியர்களின் வாழ்க்கையோடு இணைக்கிறார். அதுவும் காவல் கோட்டம் படித்த கையோடு இதைப் படித்தால் அதன் நீட்சியாக இதை உணர்வீர்கள்.
காவல் கோட்டம் நாவலில் விஜயநகரப் பேரரசின் குரல்வளை எவ்வாறு நெரிக்கப்பட்டது என்பதைச் சொல்வதாகக் கொண்டால், இந்த 1801 நாவலில் நெரிக்கப்பட்ட குரல்வளையின் கடைசி சுவாசத்தை பதிவு செய்திருக்கிறது என்று கொள்ளலாம்.
இந்த நாவல்ல ஒரு வரி இப்படி வரும் கம்பெனி தன் படையில் வீரர்களை உருவாக்குவதை விட எதிரிகளின் படையில் துரோகிகளை விரைவிலேயே உருவாக்கி விடுகிறார்கள் என்று, அது எத்தனை பொருத்தமான வார்த்தை என்பதை வரலாறு இன்றுவரை சொல்லிக்கொண்டே இருக்கிறது. இந்த நாவலின் சில பகுதிகளோடு எனக்கு முரண்பாடுகள் இருந்தாலும் அதை புனைவு எனக் கருதி பெரிதுபடுத்தாமலும், வரலாறை முக்கியத்துவப்படுத்த எண்ணியும் சில தவறுகளையும், பிழைகளையும் சொல்லாமல் தவிர்த்திருக்கிறேன்.
கண்டிப்பாக தமிழர்கள் ஒவ்வொரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய வரலாறு என்பதால் கட்டாயம் நாவலை வாசிக்க முயற்சி செய்யுங்கள். வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே..
#Kmkarthikeyan_2020-57