அம்மா வந்தாள்
தி. ஜானகிராமன்
‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நியதி களுக்குக் கட்டுப்பட்டவை அல்ல. அவை உணர்ச்சிகளுக்கு வசப்படுபவை. இந்த இரண்டு கருத்தோட்டங்களின் ஈவாகவே மனித வாழ்க்கை இருக்கிறது; இருக்கும் என்பதை வலியுறுத்துகிறது கதை. இவ்விரு நிலைகளில் ஊசலாடுபவர் களாகவே முதன்மைப் பாத்திரங்கள் அமைகின்றன. இந்த ஊசலாட்டத்தை கலையாக்குகிறார் தி. ஜானகிராமன். ஆசாரங்களையும் விதிகளையும் மீறி மனிதர்களை நிர்ணயிப்பது அவர்களது உணர்வுகள்தாம் என்பதை இயல்பாகச் சொல்வதுதான் அவருடைய கலைநோக்கு. அந்த நோக்கம் உச்சமாக மிளிரும் படைப்புகளில் முதலிடம் வகிப்பது ‘அம்மா வந்தாள்’.

நாம் பெறவேண்டிய மாற்றம்
மாயப் பெரு நதி
எண்ணங்கள் தரும் அபார வெற்றி!
உலகிற்கு சீனா ஏன் தேவை
வெளித்தெரியா வேர்கள்
சாதனைகள் சாத்தியமே
பிரம்ம சூத்திரம்
வலசைப் பறவை
ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள்
மானுடம் வெல்லும்
தினம் ஒரு பாசுரம் படிக்கலாம் வாங்க
நாயக்க மாதேவிகள்
வாத்ஸாயனரின் காம சாஸ்திரம்
இலங்கை: எழுதித் தீரா சொற்கள்
திருவாசகம் பதிக விளக்கம்
பையன் கதைகள்
அராஜகவாதமா? சோசலிசமா?
ஓசை உடைத்த கவிதைகளில் இசை
புயலுக்கு இசை வழங்கும் பேரியக்கம்
அண்ணாவின் கதை இலக்கியம் (ஓர் ஆய்வு)
மகிழ்ச்சி நிறைந்த மண வாழ்க்கைக்கு மணியான யோசனைகள்
மரபும் புதுமையும் பித்தமும்
சங்க சான்றோர் வழியில் இலெனின் தங்கப்பா
சேர மன்னர் வரலாறு
பண்முக ஆளுமை அயோத்திதாசப் பண்டிதர்
போர் தொடர்கிறது
லன்ச் மேப் தமிழக ஃபுட் டைரி
அரிஸ்டாட்டில் அறிவு உலகத்தின் ஆரம்பக்குரல்
சப்தங்கள்
சப்தரிஷி மண்டலம்
பத்துப்பாட்டு தெளிவுரையுடன் (பகுதி 1)
சாவுக்கே சவால்
செம்மணி வளையல்
அய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்
சமஸ்கிருத ஆதிக்கம்
கொஞ்சம் தேநீர் கொஞ்சம் ஹிந்துத்துவம்
கண்ணெல்லாம் உன்னோடுதான் (இரு நாவல் தொகுப்பு)
கரும்பலகைக்கு அப்பால் (ஆசிரியர் குறித்த திரைப்படங்கள்)
Book of Quotations
மத்தவிலாசப் பிரகசனம்
அந்த நேரத்து நதியில்...
Carry on, but remember!
சித்தர்களின் மூலிகைக் குடிநீர் மருத்துவம்
கல்வியினாலாய பயனென்கொல்? (கல்வி குறித்த கட்டுரைகள்)
ஓநாயும் நாயும் பூனையும்
தண்டனைக் களமாகும் பெண்ணுடல்
Antartica: Profits of Discovery
ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்
இமைக்கணம் – மகாபாரதம் நாவல் வடிவில்
ஐந்து விளக்குகளின் கதை
அசோகர்
சந்திரகிரி ஆற்றங்கரையில்
கோரா
கோலப்பனின் அடவுகள்
காதல் 


அம்மு ராகவ் –
#அம்மா_வந்தாள்
#திஜானகிராமன்
வேதத்தை தவிர வெளியுலகம்
எதுவும் தெரியாமல் வளர்ந்துவிட்டு, அம்மா, தோழி
என்று இரு பெண்களின் மனஉணர்வுகளுக்கிடையே சிக்கித் தவிக்கும் அப்பு….
நானாவது உன்னையே நினைச்சுட்டு சாகறேன்,
உங்கம்மா யாரையோ நினைச்சுட்டு சாகாம இருக்கா என்று கதறும்…
சிறுவயதிலிருந்தே அப்புவை நேசித்துக்கொண்டிருக்கும் கைம்பெண்ணான இந்து.
தன் மனைவியையே ஒரு முறையாவது இவளை கட்டியாள வேண்டும்னு நினைக்கிற தண்டபானி…
கணவனானாலும் சரி, சிவசுவானாலும் சரி எவனும் தன்னை ஆள முடியாது என தானே தன்னை ஆளும் பெண்ணாக, கம்பீரமாக நிற்கும் அழகான ஆளுமை அலங்காரம்…
ஒரு பெண்ணை ஆள வேண்டுமென எவன் நினைக்கிறானோ, அவனை அப்பெண் ஆண்டுகொண்டிருக்கிறாள்…அதுதான் உண்மை.
ஒரு கட்டத்தில் கணவனுடனான தாம்பத்தியத்தை நிறுத்திக் கொள்ள, போறும்னா போறும்தான்…என்று
60 களிலேயே தன் கணவனை பார்த்து No means No என்று சொல்ல ஒரு பெண்ணுக்கு எவ்வளவு துணிச்சல் வேண்டும். அலங்காரம் மட்டுமல்ல தி.ஜா வின் கதாநாயகிகள் ஒவ்வொருவரும்
பிரம்மிக்க வைக்கிறார்கள் என்னை…..
#அம்முராகவ்