இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

ம.பொ.சி.யும் ஆதித்தனாரும் தமிழ் தேசியத் தலைவர்களா?
காணக் கிடைத்த பிரதிகள்
பசுமைப் புரட்சியின் கதை
இதன் விலை ரூபாய் மூவாயிரம்
திருவிளையாடற் புராணம்
கீதையின் மறுபக்கம்
முக்தி ரகஸ்ய விளக்கமெனும் முமுட்சுப்படி
குறள் வாசிப்பு
பகை வட்டம்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-11)
மகாபாரதத்தில் வர்ண(அ) தர்மமும் பெண்ணடிமையும்
இது எனது நகரம் இல்லை
எதுவாக இருக்கும்?
நமது குறிக்கோள் தொகுதி - 2
இலக்கணவியல்: மீக்கோட்பாடும் கோட்பாடுகளும்
அள்ள அள்ளப் பணம் 6 - மியூச்சுவல் ஃபண்ட்
இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாள் மற்றும் படுவன்கரை குறிப்புகள்
மறக்க முடியாத மனிதர்கள்
பகுத்தறிவுப் பண்பாளர் சின்னகுத்தூசி - 100
மால்கம் X: என் வாழ்க்கை
நூல் வெளியீட்டு விழாவில் கலைஞர்
குறத்தி முடுக்கு
ஒளவையாரின் ஆத்திசூடி நீதிக் கதைகள்-1
சினிமா கொட்டகை
சூதாடி
நாங்கள் அவர்கள்
அழகிய மரம் : 18ம் நூற்றாண்டில் இந்தியப் பாரம்பரியக் கல்வி
உச்சக்கட்டம்: உண்மைகளும் தீர்வுகளும்
நாவல் பழ இளவரசியின் கதை
கருப்பட்டி
திருக்குறள் சாஸ்திரங்களின் சாரமா?
ஜென் தத்துவக் கதைகள்
லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள்
சிதம்பரம் மறைஞானசம்பந்தர் அருளிய அருணகிரிப் புராணம்
பாலர்களுக்கான இராமாயணம்
ராமாயணம் எத்தனை ராமாயணம்
தமிழன் என்பவன் உலகலாவிய மனிதன்
குடும்பமும் அரசியலும்
சமூக யதார்த்தமும் இலக்கியப் புனைவும்
சேரமன்னர் வரலாறு
ம.பொ.சியும் ஆதித்தனாரும் தமிழ்த் தேசியத் தலைவர்களா?
பசலை ருசியறிதல்
கன்சிராமின் கனவை வென்ற திராவிட மாடல்
இளைஞர்களே... திராவிடம் பேசுவோம்
மகா பிராமணன்
இராகபாவார்த்தம்
உதயபானு
அவளை மொழிபெயர்த்தல்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 8)
துளசி பூஜா விதிகளும அர்ச்சனையும்
கொற்கை
அப்பனின் கைகளால் அடிப்பவன்
நேர் நேர் தேமா
மாமல்லபுரம்: புலிக்குகையும் கிருஷ்ண மண்டபமும்
ஒரு கல்யாணத்தின் கதை
பயம் தவிர்ப்போம்
பெருந்தன்மை பேணுவோம்
இத்திக்காய் காயாதே
மலேசிய இந்தியத் தமிழர்களின் அவல நிலை
இரவீந்திரநாத் தாகூர் ( இந்திய இலக்கியச் சிற்பிகள்)
இந்துக்கள் ஒன்றுசேர முடியுமா?
சிறுவர்க்கான ஷேக்ஸ்பியர் கதைகள் பாகம் - 1
நீண்ட காத்திருப்பு
ஏவாளின் நாட்குறிப்பு: மூலத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது
இராமாயணம் - வால்மீகி
மற்றாங்கே
இந்து - சைவம் – வைணவம் ஓர் அறிமுகம்
கரியோடன்
திருக்குறளில் இந்து சனாதன மறுப்பு
பெரியாரியல் பாடங்கள் (தொகுதி -1)
யாருமே தடுக்கல
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 8)
தெருவென்று எதனைச் சொல்வீர்
ஏமாளி
உலகின் கடைசி மனிதன்
வாழ்வியல் சிந்தனைகள் தொகுதி - 11
அருளும் பொருளும் தரும் வாஸ்து சாஸ்திரமும் விளக்கங்களும்
கடுவழித்துணை
மரநாய் 


Reviews
There are no reviews yet.