இந்து மதம் தொடர்பாக எழும் பல்வேறு வினாக்களுக்கு விடையளிக்கும் நூல். பெரும்பாலான மக்களின் கடவுள் குலதெய்வம்தானே, அவர்களை எப்படி இந்து என்று சொல்ல முடியும்? நாத்திகவாதத்துக்கும் இந்து மதத்துக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? உருவ வழிபாடு தேவையா? பிரபஞ்சத்துக்கும் மதத்துக்கும் உள்ள இணைப்பு எது? கோயில்களில் உடலுறவுச் சிலைகள் இருப்பது சரியா? கருவறையின் பூஜை மந்திரங்களாக சம்ஸ்கிருதம் இருப்பது ஏன்? இந்து மதம் தொடர்பான இவை போன்ற பல கேள்விகளுக்கு நூலாசிரியர் மிகத் தெளிவாக கூறிய பதில்களின் தொகுப்பே இந்நூல்.
சிறுதெய்வ வழிபாட்டைப் பற்றி விளக்கும்போது, “எந்தச் சிறு தெய்வமும் இந்து பொதுமரபில் எங்கோதான் இருந்து கொண்டிருக்கும். கண்டிப்பாக முற்றிலும் வெளியே இருக்காது… இந்து மதம் ஓர் எல்லையில் உயர் தத்துவமும் மறு எல்லையில் பழங்குடி நம்பிக்கைகளும் ஆசாரங்களும் நின்று கொண்டு தொடர்ச்சியாக நிகழ்த்தும் ஓர் உரையாடல்” என்கிறார் நூலாசிரியர்.
“சோழர்காலகட்டம் முதல், தமிழகத்தில் பெருமதங்கள் வேரூன்றிவிட்டிருக்கின்றன. அவற்றை ஒட்டி உருவான பிரமாண்டமான பக்தி இயக்கம், தமிழகத்தின் இன்றைய கலைகள், சிந்தனைகள், வாழ்க்கைமுறைகள் எல்லாவற்றையும் தீர்மானித்தது… பக்தி இயக்கம் பக்தியையே ஆன்மிகத்தின் ஒரே முகமாகக் காட்டியது. அந்த பக்தியும் பெருமதங்களுக்குள் நிற்கக் கூடியதாக வடிவமைத்தது” என்று இன்றைய இந்துமதத்தின் வளர்ச்சிநிலைகளைத் தெளிவாக விளக்குகிறார்.
கோயில்களில் சம்ஸ்கிருதம் வழிபாட்டு மொழியாக இருப்பது ஏன்? என்ற வினாவுக்கு, “மதம் நாடு, மொழி சார்ந்த எல்லைக்குள் நிற்பதல்ல, ஆந்திரத்து பக்தர் கன்னியாகுமரியில் வழிபட வேண்டும். கன்யாகுமரி பக்தர் பத்ரிநாத்தில் வழிபட வேண்டும். ஆகவேதான் ஒரு பொதுவழிபாட்டு மொழிக்கான தேவை ஏற்பட்டது. சம்ஸ்கிருதம் அந்த இடத்தை அடைந்து பல நூற்றாண்டுகளாகின்றது” என்று கூறுகிறார்.
“இந்து மதம், வரலாற்றில் பல்வேறு வழிபாட்டு மரபுகளும் சிந்தனைகளும் பின்னிக் கலந்து உருவாகி வந்த ஒரு பெரும் ஞானத்தொகை. அந்த ஞானத்தை முறையாக அறிவதும் அந்த அறிவின் அடிப்படையில் வாழ்க்கையை உருவாக்கிக் கொள்வதுமே ஓர் இந்துவின் கடமை” என இந்து மதம் பற்றிய புரிதலை ஒருவர் வந்தடைய இந்நூல் உதவும்.
நன்றி – தினமணி

ரூஹ்
நீங்களும் வெற்றியாளர்தான்
வளம் தரும் விரதங்கள்
புதுக்கோட்டை மாவட்ட ஆலயங்கள்
அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு
சாதனையை நோக்கிய பயணம்
My big book of ABC
தனிமையின் நூர் வருடங்கள்
இந்து மதத் தத்துவம்
மரபும் புதுமையும் பித்தமும்
திராவிடர் - ஆரியர் உண்மை
அஷ்டாஷ்ட மூர்த்தங்கள் எனும் 64 சிவவடிவங்களும் தத்துவ விளக்கங்களும்
மகாத்மா-காந்தி-வாழ்க்கை வரலாறு
புயலிலே ஒரு தோணி
பயம் தவிர்ப்போம்
என்றும் இளமை காக்கும் இயற்கை உணவுகள்
தீண்டாத வசந்தம்
HINDU NATIONALISM
பெரியார் களஞ்சியம் - ஜாதி - தீண்டாமை - 11 (பாகம்-17)
ஆழ்கடல் அதிசயங்கள்
தலை சிறந்த விஞ்ஞானிகள்
கோலப்பனின் அடவுகள்
கிராமத்து தெருக்களின் வழியே
அய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்
மகிழ்ச்சி நிறைந்த மண வாழ்க்கைக்கு மணியான யோசனைகள்
கரும்பலகைக்கு அப்பால் (ஆசிரியர் குறித்த திரைப்படங்கள்)
Great Indians
பயிற்சிகள் மற்றும் சாவியுடன் சரியான ஆங்கில இலக்கணம்
தமிழர் பண்பாடும் – தத்துவமும்
On The Origin Of Species
மோகினித் தீவு
பா.ச.க பாசிச எதிர்ப்பின் பாதை
அம்பேத்கர்
சாவுக்கே சவால்
சாதீ பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை
ஞானக்கூத்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
சண்டிதாசரின் காதல் கவிதைகள்
பற்றியெரியும் பஸ்தர்
ஞானக்கூத்தன் கவிதைகள்
ஆடு மாடு மற்றும் மனிதர்கள்
கம்பரசம்
அகம்
கம்பன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
சிகரமும் நீயே அதன் உயரமும் நீயே
சந்திரகிரி ஆற்றங்கரையில்
கொஞ்சம் தேநீர் கொஞ்சம் ஹிந்துத்துவம்
அறிவுத் தேடல்
கமலி
கிரா என்றொரு கீதாரி
மொழிப்பெயர்ப்புப் பார்வைகள்
வாடிவாசல்
கயமை
திருக்குறள் கலைஞர் உரை
நவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள்
காதல் 
Reviews
There are no reviews yet.