1801 – நாவல்
இந்திய சுதந்திர வரலாற்றில் விடுதலை எழுச்சிக்கான முதல் குரல் தென்னகத்தில்தான் ஒலித்தது. ஒலிக்கச் செய்தவர்கள் பூலித்தேவர், திப்பு சுல்தான், கட்டபொம்மன், தூந்தாஜி வாக், மருது பாண்டியர்கள், ஊமைத்துரை, விருப்பாச்சி கோபால் நாய்க்கர், தீரன் சின்னமலை உள்ளிட்ட போராளிகளே.
தென்னிந்தியாவின் போராளிகளை ஒன்று திரட்டி மருது சகோதரர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக 1801-ஆம் ஆண்டு நடத்திய போராட்டமே இந்திய விடுதலைப் போராட்டத்தின் தொடக்கமாகும். ஆங்கிலேயர்கள் மிக அதிகமான மனித இழப்புகளை சந்தித்ததும் இந்தப் போர்க்களத்தில்தான். இந்திய விடுதலைப் போராட்டக்காரர்கள் முதன்முதலில் நாடுகடத்தப்பட்டதும் இப்போரில் தான்.
உலகம் முழுக்க நடந்த விடுதலைப் போர்களின் விழுச்சிக்குப் பல காரணங்கள் இருந்துள்ளன. தென்னிந்திய விடுதலைப் புரட்சியின் வீழ்ச்சிக்குக் காரணமாய் அமைந்தது சில தனி நபர்களின் துரோகம் மட்டுமே. சில நூறு பணங்கள், சிறு துண்டு நிலம், ஆசை வார்த்தைகள், அதிகாரத்தில் பங்கு, ஆட்சியில் பங்கு என ஆங்கிலேயர்கள் விரித்த வலையில் விழுந்து துரோகிகளாக மாற ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம்.
முதல் இந்திய சுந்தந்திரப் போரின் எழுச்சி, வீழ்ச்சி, 18 – ஆம் நூற்றாண்டு மக்களின் வாழ்க்கை, பிரிட்டிஷ் இந்தியக் கால தமிழகம், ஆங்கிலேயர்களின் இந்திய வாழ்க்கை எனப் பல்வேறு கதைக்களன்கள் விவரிக்கப்பட்ட நாவலே ’1801.

பிரம்மசூத்திரம் - ஓர் எளிய அறிமுகம்
ஓஷோ 1000 ஒரு ஞானியின் தீர்க்க தரிசனம்...
கடவுளின் கதை (பாகம் - 3) முதலாளி யுகத்தை நோக்கி
திருப்பதி வெங்கடாஜலபதி மகிமையும் வரலாறும்
ஏற்றுமதி பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்
எட்ட இயலும் இலக்குகள்
அம்பேத்கரின் உலகம்
வாழ்க்கை வாழ்வதற்கே
அகத்தியர் முதல் வாரியர் வரை சித்தர்கள் 60 பேர் : வாழ்வும் வாக்கும்
தீரா நதி
தமிழாராய்ச்சியின் வளர்ச்சி
தமிழகத்தின் வருவாய்
அடையாள அரசியலும் திருமாவின் அனுபவ இயங்கியலும்
பத்துப்பாட்டு தெளிவுரையுடன் (பகுதி 2)
குறிஞ்சி to பாலை குட்டியாக ஒரு டிரிப்!
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-10)
வாசிப்பது எப்படி?
மக்கள் விஞ்ஞானி மைக்கேல் ஃபரடே
பெண் எனும் பிள்ளைபெரும் கருவி
சேகுவாரா - வளர்ச்சி புரட்சி வீழ்ச்சி
வாழ்க்கைத் துணைநலம்
வாராணசி
ஆய்வும் தேடலும்
அர்த்தசாஸ்திரம்
போதையில் கரைந்தவர்கள்
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 4)
மாக்பெத்
கண் தெரியாத இசைஞன்
இந்து சமய பண்டிகைகள் வழிபாட்டு முறைகள்
வாழ்வியல் சிந்தனைகள்
புத்தர் ஜாதக கதைகள்
எருமை மறம்
இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்
தமிழா நீ ஓர் இந்துவா?
லிபரல் பாளையத்து கதைகள்
மாலுமி
இலக்கும் நோக்கமும்
அ. சிதம்பரநாதச் செட்டியார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
வழி வழி பாரதி
போயிட்டு வாங்க சார்
இது எனது நகரம் இல்லை
பச்சை விரல்
மூளைக்கு வேலை தரும் குறுக்கெழுத்துப் புதிர்கள்
உதயபானு
ஆத்திசூடி நீதி கதைகள்-2
ஜென் கதைகள்
கொரோனா வீட்டுக் கதைகள்
நேற்றின் நினைவுகள்
டூரிங் டாக்கிஸ்
துறைமுகம்
பன்னிரு ஜோதிலிங்க ஸ்தாலங்கள்
நா. பார்த்தசாரதி (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
படச்சுருள் ஏப்ரல் 2021 - திராவிட சினிமாவும் சமூக நீதியும் சிறப்பிதழ்
கவிதா
அபாய வீரன்
நிலமங்கை
நிதியென்னும் மூச்சுக் காற்று
அண்ணல் அடிச்சுவட்டில்
மீள் வருகை
திருக்குறள் சாஸ்திரங்களின் சாரமா?
அடுக்கு மாடி வீடு, ரியல் எஸ்டேட் வியாபராம் - சட்ட விளக்கங்கள்
செம்பியன் செல்வி
இரண்டு சகோதரர்களின் நெடும் பயணம்
உயிரில் கலந்த உறவே
தோப்பில் முஹம்மது மீரான் சிறுகதைகள்
மன்னித்துவிடு இன்பா!
தமிழ்த்தேசிய உணர்வின் முன்னோடி தமிழன் அயோத்திதாசப் பண்டிதர்
முத்தொள்ளாயிரம் – இருமொழிப் பதிப்பு
நடிப்புச் சுரங்கமான நடிகர் திலகம்
கருப்பட்டி
மனிதனுக்கு ஒரு முன்னுரை
உதயதாரகை
அற்புதமான களஞ்சியம்
கடல்
காதல் ஒரு நெருஞ்சி முள்
பயம் தவிர்ப்போம்
தொ. பரமசிவன் நேர்காணல்கள்
ஆ. கார்மேகனாரின் தேர்ந்தெடுத்த கட்டுரைகள்
இந்துக்கள் ஒன்றுசேர முடியுமா?
அடிமனதின் சுவடுகள்
தப்புத் தப்பாய் ஒரு தப்பு
சாலா - நெல்லை வட்டார வழக்குச் சிறுகதைத் தொகுப்பு
இனிய நீதி நூல்கள்
பசி
புறநானூறு (முதல் பாகம்)
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-11)
இந்து - சைவம் – வைணவம் ஓர் அறிமுகம்
இணைந்த மனம்
அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத தேவாரப் பதிகங்கள்
தொல்காப்பியப் பூங்கா
அபூர்வ கணம்
மகாபாரதம் - வியாசர்
சிவாஜி கணேசனின் மார்லன் பிராண்டோ உடனான ஒரு சமர்
ஒற்றன்
தமிழ் கவிதையியல்
நவீனன் டைரி
உலகப் புகழ்பெற்ற தஸ்தயேவ்ஸ்கி கதைகள்
மனவெளியில் காதல் பலரூபம்
ரவிக்கைச் சுகந்தம்
தலைகீழ் விகிதங்கள்
கந்தபுராணமும் இராமாயணமும் ஒன்றே!
பெரியாருடன் தலைவர்கள் சந்திப்பு
மார்க்சிய நூல்களுக்கு வாசகர் வழிகாட்டி
நன்றி சொல்லிப் பழகுவோம்!
மா. அரங்கநாதன் - நவீன எழுத்துக்கலையின் மேதைமை
ஒரு கல்யாணத்தின் கதை
நாயகன் - மார்ட்டின் லூதர் கிங்
நெகிழும் வரையறைகள் விரியும் எல்லைகள்
நினைவுப்பாதை
ஃபெங்சுயி எளிய வாஸ்து பரிகாரங்கள்
மாஸ்டர் ஷாட்
ரெயினீஸ் ஐயர் தெரு
நான் மலாலா - பெண் கல்விக்காகப் போராடி தாலிபானால் சுடப்பட்ட சிறுமியின் கதை
நாதுராம் கோட்சே (உருவான வரலாறும் இந்தியா குறித்த அவனது பார்வையும்)
சிறுகதை எழுதுவது எப்படி? 
Kmkarthi kn –
1801
மு.ராஜேந்திரன்.இ.ஆ.ப
அகநி வெளியீடு.
சென்ற ஆண்டு சாகித்ய அகாடமி விருதுக்கான போட்டியில் சூல் நாவலுக்கும் இந்த 1801 எனும் நாவலுக்கும் இடையே பலத்த போட்டியிருந்தது என்ற செய்தியின் காரணமாக ஈர்க்கப்பட்டே இந்த புத்தகத்தை வாங்கினேன். இந்த புத்தகத்தை வாசிக்க கையில் எடுக்கும் வரையிலுமே இந்த புத்தகம் எதைப்பற்றியது என அறியாதவனாகவே இருந்தேன். அதனாலயே இதை வாசிக்க இத்தனை தாமதமாகிவிட்டது.
வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கிலிடுவதிலிருந்து நாவல் ஆரம்பமாகிறது. அப்போதே நாவலின் போக்கை நமக்கு தெளிவாக உரைத்துவிடுகிறார். 1801 ம் ஆண்டு சிவகங்கைச் சீமையில் காளையார் கோயில் காட்டுக்குள் மருது சகோதரர்களுக்கும் கிழக்கிந்திய கம்பெனிக்கும் இடையே நடக்கும் யுத்தத்தை நோக்கித்தான் நாவல் நகரும் என தெளிவான பாதையை வாசகருக்குக் கடத்துவதோடு மட்டுமில்லாமல் ஒவ்வொரு அத்தியாயத்திலும் அதற்கான சொக்குப்பொடியை தூவிக்கொண்டே செல்வது தான் சிறப்பு.
இந்திய வரலாற்றில் முதல் சுதந்திரப்போர் என்றால் அது காளையார் கோவில் காட்டுக்குள் 1801ல்நடந்த போர் தான் என்கிறார். 1857ல் நடந்த சிப்பாய் கலகத்தில் மக்கள் பங்குபெறவில்லை, ஆனால் இந்தப் போரில் சிவகங்கைச் சீமையின் மொத்த மக்களும் பங்கு கொண்டனர் என்கிறார். அதற்கு ஆதாரமாக போர் முடிந்தவுடன் ஊரின் அனைத்து மக்களிடமும் இருக்கும் ஆயுதங்கள் பறிக்கப்பட்டு, இனிமேல் எந்த புரட்சியிலும் ஈடுபடமாட்டேன் என்று ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக ஒப்பந்தம் போடப்பட்டதையும் குறிப்பிடுகிறார்.
நாங்குநேரி முதல் பூனே வரை உள்ள புரட்சியாளர்களை ஒருங்கிணைத்து கம்பெனிக்கு எதிராக சின்னமருது போர் புரிந்த சம்பவத்தையும் அதற்கு சான்றாகச் சொல்கிறார். இந்த நிகழ்வுக்கு முன் இத்தனை பெரிய ஒருங்கிணைந்த போர் கம்பெனிக்கு எதிராக நடந்ததில்லை என்பதும் வரலாறு. அதுபோக போர்ப்பிரகடணம் ஒன்றையும் சின்ன மருது தயாரித்திருக்கிறார். அதாவது தாங்கள் எதற்காக போர் புரிகிறோம், தங்களின் நோக்கம் என்ன என்பதை தெளிவாக சுவரொட்டிகளின் மூலம் மக்களுக்கும் கம்பெனிக்கும் தெளிவுபடுத்தியிருக்கிறார். இந்த நிகழ்வுகளையெல்லாம் ஆதாரங்களாகக் காட்டி இது தான் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் என முரசு கொட்டுகிறார்.
வரலாறுனா வெறும் பாடபுத்தக வரலாறு மட்டுமே தெரிந்த என்னைப்போன்ற தற்குறிகளுக்கு இதன் தகவல்கள் ஒவ்வொன்றும் வைடூரியங்கள்.
1800 – 1801 ம் ஆண்டுகளுடைய நிகழ்வுகளை மட்டும் தொகுக்காமல் அந்த நிகழ்வுக்கு எதுவெல்லாம் காரணமாயிருந்தது என ஆற்காடு நாவப்பிலிருந்து துவங்கி கௌரி வல்லபர் வரை எந்த ஒரு சின்ன நிகழ்வையும் விட்டுவிடக்கூடாது என்ற ஆசிரியரின் அக்கறை ஒவ்வொரு பக்கத்திலும் தெரிகிறது.
ஆற்காடு நவாப், ஹைதர் அலி, திப்பு சுல்தான், பூலித்தேவன், கட்டபொம்மன், ஊமைத்துரை, வேலுநாச்சியார், ராமநாதபுரம் சேதுபதி, விருப்பாட்சி கோபால் நாயக்கர், திருவிதாங்கூர் சமஸ்தானம், துத்தாஜி வாக் என நாவலில் ஒட்டுமொத்த தென்னிந்தியாவின் வரலாறையும் கொண்டுவந்து மருதுபாண்டியர்களின் வாழ்க்கையோடு இணைக்கிறார். அதுவும் காவல் கோட்டம் படித்த கையோடு இதைப் படித்தால் அதன் நீட்சியாக இதை உணர்வீர்கள்.
காவல் கோட்டம் நாவலில் விஜயநகரப் பேரரசின் குரல்வளை எவ்வாறு நெரிக்கப்பட்டது என்பதைச் சொல்வதாகக் கொண்டால், இந்த 1801 நாவலில் நெரிக்கப்பட்ட குரல்வளையின் கடைசி சுவாசத்தை பதிவு செய்திருக்கிறது என்று கொள்ளலாம்.
இந்த நாவல்ல ஒரு வரி இப்படி வரும் கம்பெனி தன் படையில் வீரர்களை உருவாக்குவதை விட எதிரிகளின் படையில் துரோகிகளை விரைவிலேயே உருவாக்கி விடுகிறார்கள் என்று, அது எத்தனை பொருத்தமான வார்த்தை என்பதை வரலாறு இன்றுவரை சொல்லிக்கொண்டே இருக்கிறது. இந்த நாவலின் சில பகுதிகளோடு எனக்கு முரண்பாடுகள் இருந்தாலும் அதை புனைவு எனக் கருதி பெரிதுபடுத்தாமலும், வரலாறை முக்கியத்துவப்படுத்த எண்ணியும் சில தவறுகளையும், பிழைகளையும் சொல்லாமல் தவிர்த்திருக்கிறேன்.
கண்டிப்பாக தமிழர்கள் ஒவ்வொரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய வரலாறு என்பதால் கட்டாயம் நாவலை வாசிக்க முயற்சி செய்யுங்கள். வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே..
#Kmkarthikeyan_2020-57