Arintha aalayangal apoorva thagavalgal
அன்று முக்கியமான ஒரு திருநாள்… ‘இந்த விசேஷ தினத்தில் கோயிலுக்குப் போய்க் கொஞ்சம் புண்ணியம் தேடிக் கொள்ளலாம்’ என்று விரும்பிய அந்தத் தம்பதி, தங்களின் பத்து வயது மகனுடன், அருகில் உள்ள ஒரு கோயிலுக்குப் போனார்கள். கோயிலில் எக்கச்சக்க கூட்டம். கடவுளை தரிசித்து அவரின் அருள் பெற வேண்டி வந்த கணவன், வந்த வேலையை மறந்து, கோயிலின் ஒரு மூலையில் அமர்ந்திருந்திருந்த ‘திடீர்’ ஜோசியக்காரரை அணுகி, ‘ஐயா… சொந்த வீடு நான் எப்ப வாங்குவேன்?’ என்று கேட்டான். அவரும் குத்துமதிப்பாக ஒரு காலநேரத்தைச் சொல்லி, கணிசமான பணத்தைக் கறந்து அனுப்பினார். விதம் விதமான புடவைகள் மற்றும் நகை அணிந்து கோயிலுக்கு வந்திருந்த மற்ற பெண்மணிகளைக் கண்டதும், மனைவியாகப்பட்டவள் மதி மயங்கினாள். சாமியைத் தரிசிக்கும் எண்ணத்தை மறந்தாள். ‘இவ புடவை நல்லாருக்கே… அவளோட நகை ஜொலிக்குதே…’ என்று ஒவ்வொன்றையும் ரசிக்க ஆரம்பித்து விட்டாள். தெய்வ சந்நிதிகளை அவள் தரிசிக்கவில்லை. இறை பக்தியில் நாட்டம் செல்லவிலை. அவர்களின் பத்து வயது மகன் மூலவர் சந்நிதிக்கு முன் சென்று பயபக்தியோடு நின்றான். ‘என் பெற்றோர் நோய் நொடி இல்லாமல் இருக்க வேண்டும். அவர்களுக்கு எந்தக் கஷ்டமும் வரக் கூடாது. நான் நன்றாகப் படித்து முடித்து அவர்களைக் காப்பாற்ற வேண்டும்’ என்று மனமுருக வேண்டினான். & இந்த மூவரில் உண்மையான பக்தி யாருக்கு இருக்கிறது என்பது உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும். பக்திக்குப் பணிவு தேவை; பகட்டு கூடாது. ஏனோ தெரியவில்லை, இறை பக்தியைத் தேடிச் செல்லும் ஆலயங்களில், முழு ஈடுபாடு காட்ட மறக்கிறோம். புண்ணியத்தைப் பெருக்கிக் கொள்ள மறுக்கிறோம். வேறு விஷயங்களில் சிந்தனையைச் சிதற விட்டு விடுகிறோம். ஒரு கோயில் என்று எடுத்துக் கொண்டால், உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து விஷயங்களும் அங்கே கிடைக்கும். ஆலயங்களில் புதைந்துள்ள அற்புதங்களும், அவை சொல்லும் அதிசயங்களும் ஏராளம். ஒவ்வொரு ஆலயத்துக்கும் ஒவ்வொரு புராணம் இருக்கிறது. சிறப்பு இருக்கிறது. மகத்துவம் இருக்கிறது. அவற்றை எல்லாம் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். பலன் பெற வேண்டும். ஓர் ஆலயத்தைத் தரிசிக்கச் செல்லும் முன் அந்த ஆலயம் பற்றிய முழு விவரங்களையும் நம் விரல் நுனியில் வைத்திருந்தால், விளக்கங்கள் கேட்டு எவரிடமும் செல்ல வேண்டாம். உங்கள் கைகளில் தவழும் ‘அறிந்த ஆலயங்கள், அபூர்வ தகவல்கள்’ என்ற இந்தப் புத்தகம் ஓர் உன்னதமான தொகுப்பு. பிரபலமான ஒவ்வொரு ஆலயத்தைப் பற்றியும் வாசகர்கள் எழுதி அனுப்பிய செய்திகளை, அலசி ஆராய்ந்து அதை அழகான கட்டுரையாகத் தொகுத்து சக்தி விகடன் இதழ் தொடர்ந்து வெளியிட்டது. விகடன் பிரசுரமாக இப்போது மலர்ந்திருக்கும் இந்தத் தொகுப்பு, அந்தந்த ஆலயம் குறித்த பயனுள்ள கையேடு. படித்துப் பாதுகாக்கப்பட வேண்டிய தகவல் களஞ்சியம்.

மருத்துவ ஜோதிடம்
பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர் புரட்சியும்
என்றும் இளமை காக்கும் இயற்கை உணவுகள்
புத்ர
திருக்குறள் பரிமேல் அழகர் உரை
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-6)
பேரரசி நூர்ஜஹான்
சித்தர்கள் அருளிய பஞ்சபட்சி ரகசியம்
பட்டக்காடு
மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி ஏன்?
அசோகமித்திரன் சிறுகதைகள் (1956-2016)
பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள் (தொகுதி -2)
தங்கம் செய்யலாம் வாங்க (இது பரம சித்த ரகசியம்)
அரசியல் சிந்தனையாளர் புத்தர்
உடல் - பால் - பொருள் (பாலியல் வன்முறை எனும் சமூகச்செயற்பாடு)
அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
சுந்தரகாண்டம்
வேறு ஒரு வெயில்
வன்னியர் தோற்றமும், வளர்ச்சியும்
இனி போயின போயின துன்பங்கள்
கடைசிக் களவு
மகாபாரதம் அறத்தின் குரல் - மகாபாரதக் கதை முழுவதும்
ராஜமுத்திரை (இரண்டு பாகங்களுடன்)
கிராமத்து தெருக்களின் வழியே
திருக்குறள் உரைக் களஞ்சியம்
உங்கள் அதிர்ஷ்ட வழிகாட்டி
நிறைய அறைகள் உள்ள வீடு
அன்பிற்குரிய D ஆகிய உனக்கு...
ஒழிவில் ஒடுக்கம் எனும் சைவ சித்தாந்த ஞானம்
அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்!
விடுதலை இயக்கத்தில் தமிழகம்
சிறுகதை எழுதுவது எப்படி?
முச்சந்தி இலக்கியம்
தமிழ் மூலம் இந்தி கற்றுக்கொள்ளுங்கள்
கோகிலாம்பாள் கடிதங்கள்
கலங்கிய நதி
அன்பு குழந்தைகளுக்கு அழகான பெயர்கள் 4000
காயப்படும் நியாயங்கள்
தமிழர் தலைவர் வீரமணியின் வாழ்வும் பணியும்
அத்யாத்ம ராமாயணம்
கருங்கடலும் கலைக்கடலும்
இரும்புக் குதிகால்
ஆன்மீக அரசியல்
உற்சாக டானிக்
சங்க இலக்கியச் சோலை
யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும்
புதிய பொலிவு
மாபெரும் சபைதனில்
வளம் தரும் வாஸ்து சாஸ்திரம்
சிரிப்பாலயம்
சைவ இலக்கிய வரலாறு
திருக்குறள் நீதி கதைகள்
காலத்தை வெல்லும் திருமுறைகள்
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 5) பிரிட்டனின் நேரடிஆட்சிக் காலம்
திருக்குறள் கலைஞர் உரை
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
இப்படி ஒரு தீயா! (குறள் தழுவிய காதல் கவிதைகள்)
சாண்டோ சின்னப்பா தேவர்
கயிறு (மூன்று பாகங்கள்)
மீறல்
திருக்குறள் கலைஞர் உரை (மக்கள் பதிப்பு)
பைசாசம்
சன்னத்தூறல்
சப்தங்கள் 
Reviews
There are no reviews yet.