Arintha aalayangal apoorva thagavalgal
அன்று முக்கியமான ஒரு திருநாள்… ‘இந்த விசேஷ தினத்தில் கோயிலுக்குப் போய்க் கொஞ்சம் புண்ணியம் தேடிக் கொள்ளலாம்’ என்று விரும்பிய அந்தத் தம்பதி, தங்களின் பத்து வயது மகனுடன், அருகில் உள்ள ஒரு கோயிலுக்குப் போனார்கள். கோயிலில் எக்கச்சக்க கூட்டம். கடவுளை தரிசித்து அவரின் அருள் பெற வேண்டி வந்த கணவன், வந்த வேலையை மறந்து, கோயிலின் ஒரு மூலையில் அமர்ந்திருந்திருந்த ‘திடீர்’ ஜோசியக்காரரை அணுகி, ‘ஐயா… சொந்த வீடு நான் எப்ப வாங்குவேன்?’ என்று கேட்டான். அவரும் குத்துமதிப்பாக ஒரு காலநேரத்தைச் சொல்லி, கணிசமான பணத்தைக் கறந்து அனுப்பினார். விதம் விதமான புடவைகள் மற்றும் நகை அணிந்து கோயிலுக்கு வந்திருந்த மற்ற பெண்மணிகளைக் கண்டதும், மனைவியாகப்பட்டவள் மதி மயங்கினாள். சாமியைத் தரிசிக்கும் எண்ணத்தை மறந்தாள். ‘இவ புடவை நல்லாருக்கே… அவளோட நகை ஜொலிக்குதே…’ என்று ஒவ்வொன்றையும் ரசிக்க ஆரம்பித்து விட்டாள். தெய்வ சந்நிதிகளை அவள் தரிசிக்கவில்லை. இறை பக்தியில் நாட்டம் செல்லவிலை. அவர்களின் பத்து வயது மகன் மூலவர் சந்நிதிக்கு முன் சென்று பயபக்தியோடு நின்றான். ‘என் பெற்றோர் நோய் நொடி இல்லாமல் இருக்க வேண்டும். அவர்களுக்கு எந்தக் கஷ்டமும் வரக் கூடாது. நான் நன்றாகப் படித்து முடித்து அவர்களைக் காப்பாற்ற வேண்டும்’ என்று மனமுருக வேண்டினான். & இந்த மூவரில் உண்மையான பக்தி யாருக்கு இருக்கிறது என்பது உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும். பக்திக்குப் பணிவு தேவை; பகட்டு கூடாது. ஏனோ தெரியவில்லை, இறை பக்தியைத் தேடிச் செல்லும் ஆலயங்களில், முழு ஈடுபாடு காட்ட மறக்கிறோம். புண்ணியத்தைப் பெருக்கிக் கொள்ள மறுக்கிறோம். வேறு விஷயங்களில் சிந்தனையைச் சிதற விட்டு விடுகிறோம். ஒரு கோயில் என்று எடுத்துக் கொண்டால், உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து விஷயங்களும் அங்கே கிடைக்கும். ஆலயங்களில் புதைந்துள்ள அற்புதங்களும், அவை சொல்லும் அதிசயங்களும் ஏராளம். ஒவ்வொரு ஆலயத்துக்கும் ஒவ்வொரு புராணம் இருக்கிறது. சிறப்பு இருக்கிறது. மகத்துவம் இருக்கிறது. அவற்றை எல்லாம் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். பலன் பெற வேண்டும். ஓர் ஆலயத்தைத் தரிசிக்கச் செல்லும் முன் அந்த ஆலயம் பற்றிய முழு விவரங்களையும் நம் விரல் நுனியில் வைத்திருந்தால், விளக்கங்கள் கேட்டு எவரிடமும் செல்ல வேண்டாம். உங்கள் கைகளில் தவழும் ‘அறிந்த ஆலயங்கள், அபூர்வ தகவல்கள்’ என்ற இந்தப் புத்தகம் ஓர் உன்னதமான தொகுப்பு. பிரபலமான ஒவ்வொரு ஆலயத்தைப் பற்றியும் வாசகர்கள் எழுதி அனுப்பிய செய்திகளை, அலசி ஆராய்ந்து அதை அழகான கட்டுரையாகத் தொகுத்து சக்தி விகடன் இதழ் தொடர்ந்து வெளியிட்டது. விகடன் பிரசுரமாக இப்போது மலர்ந்திருக்கும் இந்தத் தொகுப்பு, அந்தந்த ஆலயம் குறித்த பயனுள்ள கையேடு. படித்துப் பாதுகாக்கப்பட வேண்டிய தகவல் களஞ்சியம்.

பறையன் பாட்டு : தலித்தல்லாதோர் கலகக் குரல்
ட்விட்டர் மொழி
பிற்காலச் சோழர் வரலாறு
மூங்கில் பூக்கும் தனிமை
சட்டம் உன் கையில்
வல்லிக்கண்ணனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
காலத்தின் கப்பல்
காலந்தோறும் பிராமணியம் (பாகம் 1) வேதகாலம் முதல் சோழர் காலம் வரை
மரி என்கிற ஆட்டுக்குட்டி
இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை
என்னுடைய பெயர் அடைக்கலம்
திருமேனி காரி இரத்தின கவிராயர் இயற்றிய நுண்பொருள் மாலை - திருக்குறள் பரிமேலழகர் உரை விளக்கம்
ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கை பயணம்
தோட்டியின் மகன்
அயோத்திதாசர் தொடங்கிவைத்த அறப்போராட்டம்
லீலை
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 7) இந்திரா காலம்
பண்பாட்டுப் படையெடுப்பும் திருக்குறளும்
அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
நினைவோ ஒரு பறவை
அறமும் அரசியலும்
ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்
The Old Man and The Sea
இது எனது நகரம் இல்லை
இன்றும் நமக்குப் பொருத்தமான கிராம்சி
புத்தம் வீடு
பாட்டிசைக்கும் பையன்கள்
அனந்தியின் டயறி
தந்தை பெரியாரின் பொருளாதாரச் சிந்தனைகள்
ஆஞ்சநேயர்
உன் பார்வை ஒரு வரம்
விடுதலை இயக்கத்தில் தமிழகம்
ததும்புதலின் பெருங்கணம்
மோகனச்சிலை
திராவிட லெனின் டாக்டர் டி.எம்.நாயர்
சாதியை ஒழிக்கவே இடஒதுக்கீடு
சித்தர்களின் அண்ட பிண்ட தத்துவம்
ரோசா லக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்
புறப்பாடு
அர்த்தமுள்ள வாழ்வு
சாணக்கிய நீதி என்னும் அர்த்த சாஸ்திரம்
சூரியன் மேற்கே உதிக்கிறான்
அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்!
வளம் தரும் விரதங்கள்
அந்தோன் சேகவ் சிறுகதைகளும் குறுநாவல்களும்
சிறை என்ன செய்யும்?
நிறங்களின் மொழி
இலக்கியத்தில் விருந்தோம்பல்
புதியதோர் உலகம் செய்வோம்
சேர மன்னர் வரலாறு
காயப்படும் நியாயங்கள்
கிருஷ்ண காவியம்
பலன் தரும் ஸ்லோகங்கள்
உடையார் (ஆறு பாகங்களுடன்)
நல்லதாக நாலு வார்த்தை
கொம்மை
அம்பிகாபதி அமராவதி
காலம் கொடுத்த கொடை
காமஞ்சரி
அபிமானி சிறுகதைகள்
செம்பீரா
தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் வேட்டை (கள ஆய்வு அறிக்கை 2018)
கவிதா
சோழர் காலச் செப்பேடுகள்
முத்துப்பாடி சனங்களின் கதை
யாக முட்டை
பண்பாட்டு அசைவுகள்
தமிழர் தலைவர் பெரியார் ஈ.வெ.ரா வாழ்க்கை வரலாறு (பாகம்-1)
எம்.எஸ்.காற்றினிலே கரைந்த துயர்
காகிதப்பூ தேன்
நளபாகம்
தம்மபதம்
அபிதான சிந்தாமணி
தமிழர் மதம்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 7)
தீண்டாத வசந்தம்
அடைக்கும் தாழ்
பொய்மான் கரடு
பேரறிஞர் அண்ணாவின் அறிவுத் துளிகள்
பறையர் ஆட்சியும் வீழ்ச்சியும்
அப்பா
திராவிடர் மாணவர் கழகத்தில் சேரவேண்டும் ஏன்?
யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை
மீறல்
இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள்
போகின்ற பாதை யெல்லாம் பூமுகம் காணுகின்றேன்
நினைவின் நீள்தடம் - கதையல்லாக் கதைகள்
கிராம கீதா
சி.சு. செல்லப்பா (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
புனைவும் நினைவும்
இயக்கம்
நீல பத்மநாபனின் 168 கதைகள்
கொரோனா வீட்டுக் கதைகள்
நாலடியார் மூலமும் உரையும்
காலத்தை வெல்லும் திருமுறைகள்
ரஜினி - சூப்பர் ஸ்டாரின் விறுவிறுப்பான வரலாறு
நாளை மற்றுமொரு நாளே
கொரங்கி
திருக்குறள் ஆராய்ச்சி
என்றும் இளமை காக்கும் இயற்கை உணவுகள்
ஒரு பொத்தல் குடையும் சில போதிமரங்களும்
ஒரு தலித்திடமிருந்து
தண்டனைக் களமாகும் பெண்ணுடல்
சன்னத்தூறல்
கௌடில்யரின் சாணக்கிய நீதி என்றும் சமூக, அரசியல் நெறிமுறைகள் (அர்த்த சாஸ்த்திரம்)
வீடு தோறும் வெற்றி
சப்தரிஷி மண்டலம்
ஒரு மார்க்சிஸ்ட் பார்வையில் திராவிடர் கழகம்
Dictionary of Accountancy and Commerce
சப்தங்கள்
ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்
சமஸ்கிருத ஆதிக்கம்
எனும்போதும் உனக்கு நன்றி
என் உயிர்த்தோழனே 
Reviews
There are no reviews yet.