இந்து மதம் தொடர்பாக எழும் பல்வேறு வினாக்களுக்கு விடையளிக்கும் நூல். பெரும்பாலான மக்களின் கடவுள் குலதெய்வம்தானே, அவர்களை எப்படி இந்து என்று சொல்ல முடியும்? நாத்திகவாதத்துக்கும் இந்து மதத்துக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? உருவ வழிபாடு தேவையா? பிரபஞ்சத்துக்கும் மதத்துக்கும் உள்ள இணைப்பு எது? கோயில்களில் உடலுறவுச் சிலைகள் இருப்பது சரியா? கருவறையின் பூஜை மந்திரங்களாக சம்ஸ்கிருதம் இருப்பது ஏன்? இந்து மதம் தொடர்பான இவை போன்ற பல கேள்விகளுக்கு நூலாசிரியர் மிகத் தெளிவாக கூறிய பதில்களின் தொகுப்பே இந்நூல்.
சிறுதெய்வ வழிபாட்டைப் பற்றி விளக்கும்போது, “எந்தச் சிறு தெய்வமும் இந்து பொதுமரபில் எங்கோதான் இருந்து கொண்டிருக்கும். கண்டிப்பாக முற்றிலும் வெளியே இருக்காது… இந்து மதம் ஓர் எல்லையில் உயர் தத்துவமும் மறு எல்லையில் பழங்குடி நம்பிக்கைகளும் ஆசாரங்களும் நின்று கொண்டு தொடர்ச்சியாக நிகழ்த்தும் ஓர் உரையாடல்” என்கிறார் நூலாசிரியர்.
“சோழர்காலகட்டம் முதல், தமிழகத்தில் பெருமதங்கள் வேரூன்றிவிட்டிருக்கின்றன. அவற்றை ஒட்டி உருவான பிரமாண்டமான பக்தி இயக்கம், தமிழகத்தின் இன்றைய கலைகள், சிந்தனைகள், வாழ்க்கைமுறைகள் எல்லாவற்றையும் தீர்மானித்தது… பக்தி இயக்கம் பக்தியையே ஆன்மிகத்தின் ஒரே முகமாகக் காட்டியது. அந்த பக்தியும் பெருமதங்களுக்குள் நிற்கக் கூடியதாக வடிவமைத்தது” என்று இன்றைய இந்துமதத்தின் வளர்ச்சிநிலைகளைத் தெளிவாக விளக்குகிறார்.
கோயில்களில் சம்ஸ்கிருதம் வழிபாட்டு மொழியாக இருப்பது ஏன்? என்ற வினாவுக்கு, “மதம் நாடு, மொழி சார்ந்த எல்லைக்குள் நிற்பதல்ல, ஆந்திரத்து பக்தர் கன்னியாகுமரியில் வழிபட வேண்டும். கன்யாகுமரி பக்தர் பத்ரிநாத்தில் வழிபட வேண்டும். ஆகவேதான் ஒரு பொதுவழிபாட்டு மொழிக்கான தேவை ஏற்பட்டது. சம்ஸ்கிருதம் அந்த இடத்தை அடைந்து பல நூற்றாண்டுகளாகின்றது” என்று கூறுகிறார்.
“இந்து மதம், வரலாற்றில் பல்வேறு வழிபாட்டு மரபுகளும் சிந்தனைகளும் பின்னிக் கலந்து உருவாகி வந்த ஒரு பெரும் ஞானத்தொகை. அந்த ஞானத்தை முறையாக அறிவதும் அந்த அறிவின் அடிப்படையில் வாழ்க்கையை உருவாக்கிக் கொள்வதுமே ஓர் இந்துவின் கடமை” என இந்து மதம் பற்றிய புரிதலை ஒருவர் வந்தடைய இந்நூல் உதவும்.
நன்றி – தினமணி

நாம் பெறவேண்டிய மாற்றம்
ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள்
சாப பூமி
தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை! (மரண சாசனம்)
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-16)
சம்பிரதாயங்கள் சரியா?
Hello, Mister Postman
தேசபக்தி என்னும் சூழ்ச்சி
ஐ லவ் யூ மிஷ்கின்
அக்கு பங்சர் அறிவோம்
இப்படி ஒரு தீயா! (குறள் தழுவிய காதல் கவிதைகள்)
கிரா என்றொரு கீதாரி
எண்ணங்கள் தரும் அபார வெற்றி!
சப்தங்கள்
திருக்குறள் ஆராய்ச்சி
இரவல் சொர்க்கம்
காலத்தின் கப்பல்
இன்றும் நமக்குப் பொருத்தமான கிராம்சி
அர்தமோனவ்கள் (3 - தலைமுறைகள்)
பெரியார் களஞ்சியம் - ஜாதி - தீண்டாமை - 11 (பாகம்-17)
சமனற்ற நீதி
குமரி நிலநீட்சி
அய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்
அன்பு குழந்தைகளுக்கு அழகான பெயர்கள் 4000
ஐங்குறுநூறு மூலமும் உரையும் (முதல் பாகம்)
ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்
உன் பார்வை ஒரு வரம்
அருளாளர்களின் அமுத மொழிகள்
அயோத்திதாசப் பண்டிதர்: தமிழ்த் தேசிய உணர்வின் முன்னோடி தமிழன்
பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர் புரட்சியும்
உலகம் போற்றும் விஞ்ஞானிகள்
பா.ச.க பாசிச எதிர்ப்பின் பாதை
காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும்
இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை
ஜானகிராமம்: தி.ஜானகிராமனின் படைப்புகளைப் பற்றிய கட்டுரைகள்
அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு
எங்கே போகிறோம் நாம்?
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 7) இந்திரா காலம்
சாத்தன் கதைகள்
நீலக் கடல்
ஆதிதிராவிடர் கட்டமைத்த அறிவுத்தளம்
செம்பருத்தி
புதிதாய் பிறப்போம்! சரித்திரம் படைப்போம்!
சட்டைக்காரி
சாலாம்புரி
சட்டம் உன் கையில்
தாம்பூலம் முதல் திருமணம் வரை
காலந்தோறும் பெண்
மகிழ்ச்சி நிறைந்த மண வாழ்க்கைக்கு மணியான யோசனைகள்
புயலுக்கு இசை வழங்கும் பேரியக்கம்
சமஸ்கிருத ஆதிக்கம்
சன்னத்தூறல்
அந்தரத்தில் பறக்கும் கொடி
சத்திய சோதனை
Carry on, but remember!
ஐந்து விளக்குகளின் கதை
மரபும் புதுமையும் பித்தமும்
தமிழ் வாழும் வரை தமிழ் ஒளி வாழ்வார் 
Reviews
There are no reviews yet.