1 review for குமரிக்கண்டமா சுமேரியமா?
Add a review
You must be logged in to post a review.
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
Subtotal: ₹47,236.00
Subtotal: ₹47,236.00
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
____₹160.00
Delivery: Items will be delivered within 2-7 days
You must be logged in to post a review.
சீ.ப்பி. செல்வம் –
#சுமேரியர்கள்தான்_தமிழர்களா…?
#அத்திரம்பாக்கத்தில் அகழ்வாய்வு செய்து, 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட #கல்லாலான_கருவிகள் கிடைத்ததன் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி என்ன?
#மடகஸ்கார் தீவில் கண்டுபிடிக்கப்பட்ட அழிந்துபோன இனத்தின் படிமங்கள் #உதகையில் கிடைத்திருக்கிறதே, அது எப்படி?
சுமேரியாவில் பாய்ந்து வளம் கொழித்து பல நகர அரசுகளை அமைப்பதற்கு காரணமாக இருந்த #யூப்ரடீஸ் ஆறுதான் #பஃகுரளி ஆறா?
சுமேரியாவின் #டைகிரீஸ் நதிக்கு குதித்து ஓடும் #குமரி ஆறு என்ற பெயரா?
முதல் சங்கம் #தென்மதுரையில் தோன்றியது என்றும், இடைச்சங்கம் #கபாடபுரத்தில் உதயமானது என்றும் படித்தோமே, அவற்றையெல்லாம் கடல் கொண்டு போய்விட்டது என்று நம் முன்னோர்கள் நமக்கு சொன்னார்களே, அவையெல்லாம் #கன்னியாகுமரிக்குத் தெற்கே இருந்தது இல்லையா?
சுமேரியாவில் இருந்து கடல் மார்க்கமாக வந்தவர்கள் குடியேறிய முதல் இடம் #கேரளக் கடற்கரைப் பகுதியா?
ஆசிய கண்டத்தில் அதிகமாக காணப்படும் #ஓநாய் வகைகளில் ஒன்றான #இரானிய_ஓநாய் எவ்வாறு ஆசிய நாடுகளில் பரவிக் காணப்பட்டது? அது எங்கிருந்து? எப்படி? எப்போது புறப்பட்டு இருக்கும்? இல்லை யார் அங்கிருந்து அழைத்து சென்றிருப்பார்கள்?
சுமேரியர்களின் புனித நூலாக கருதப்படுகிறது #கில்காமெஷ் காவியம். கில்காமெஷ் என்றால் சுமேரியர்களின் தலைவனா?, அரசாண்ட மன்னனா?, இல்லை கடவுளின் பெயரா?
#கிரீட் தீவில் (கிரேக்க நாட்டுக்கு கீழே மூன்று கண்டங்களும், ஐந்து கடல்களாலும் சூழப்பட்ட ஒரு குட்டி தீவு) வணங்கியது #முருகக் கடவுளையா? அவ்வாறு எனில், இங்கு காணப்படும் முருகக் கடவுள் என்பது?
#சிந்துவெளி மக்கள் பேசிய மொழி #தமிழ் தானா?
#திராவிடர்கள் தான் #ஆரியர்களா?, #ஆரியர் என்றால் செல்பவன், திரிபவன் என்று பொருள்படுகிறதே, ஆரியர்கள்தான் #வேதங்களை உருவாக்கினார்கள் என்று கூறப்படுகிறதே? அது எவ்வாறு உருவாகி இருக்கும்?
சுமேரியர்கள் தான் #தமிழர்களாக உருவெடுத்தாரர்களா? #தமிழ், #தமிழ்நாடு, #தென்மதுரை, #கபாடபுரம், #மதுரை போன்ற வார்த்தைகள் எல்லாம் தமிழா? இவர்கள் பேசியது தமிழ்தான் என்று எப்படி உறுதிப்படுத்தினார்கள்?
என்பது போன்ற பலநூறு கேள்விகளுக்கும், பலநூறு விவாதத்திற்கும் நம்மை அழைத்துச் செல்லும் வரலாற்று ஆய்வு புத்தகம்தான் பா.பிரபாகரன் அவர்கள் எழுதிய “#குமரிக்கண்டமா_சுமேரியமா? தமிழரின் தோற்றமும் பரவலும்” என்ற புத்தகம்.
வரலாற்றில் இன்னும் இன்றும் சொல்லாத பல செய்திகளைச் சொல்ல சொல்ல நம் கண்கள் விரியும்.. அறிவினை விரியவும் செய்யும்…
வாசியுங்கள் நண்பர்களே….
நூலின் பெயர்: “குமரிக்கண்டமா சுமேரியமா?” தமிழரின் தோற்றமும் பரவலும்
ஆசிரியர்: பா.பிரபாகரன்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்