நோபல் பரிசு பெற்ற நாவல் களில் ஒரு சிலவே தமிழில் மொழியாக்கம் செய்யப் பட்டுள்ளன. அதில் சுவீடன் நாவ லாசிரியை செல்மா லாகர்லெவ் எழுதிய ‘மதகுரு’ என்ற நாவல் மகத்தானது.
1909-ல் செல்மா லாகர்லெவ்வுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது. கெஸ்டா பெரிலிங் ஸாகா என்ற இந்தப் புகழ்பெற்ற நாவலை ‘மதகுரு’ எனத் தமிழில் க.நா.சு மொழியாக்கம் செய்திருக்கிறார். மருதா பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது. ‘கெஸ்டா பெரிலிங் ஸாகா’ ஹாலிவுட் திரைப்படமாகவும் வெளியாகியுள்ளது.
உலக இலக்கியத்தில் ஷேக்ஸ் பியருக்கும் கிரேக்க காவியங்களான ‘இலியட் ஒடிஸி’க்கும் இணையாக ‘மதகுரு’ நாவலைச் சொல்வேன் என்கிறார் க.நா.சு. இதன் பூரணத்துவம் நாவலை தனியொரு சிகரமாக உயர்த்துகிறது. தஸ்தாயேவ்ஸ்கியின் ‘கரமசோவ் சகோதரர்கள்’ நாவலை இலக்கியத்தின் சிகரம் என்பார்கள். அதற்கு நிகரானது ‘மதகுரு’. ‘இதுபோன்ற காவியத்தன்மை கொண்ட நாவல் இதுநாள் வரை எழுதப்படவில்லை’ என வியந்து சொல்கிறார் க.நா.சு.
மதகுருவான கெஸ்டா பெரிலிங்கின் கதையை விவரிக்கிறது நாவல். அளவுக்கு மீறி குடித்துவிட்டு தேவா லயத்தில் முறையாக பிரசங்கம் செய்யாமல், நடத்தை கெட்டுத் திரியும் கெஸ்டா பெரிலிங்கை விசாரணை செய் வதற்காக தலைமை மதகுருவும் மதிப்புக் குரிய மற்ற குருமார்களும் வருவதில் இருந்து நாவல் தொடங்குகிறது.
‘தன்னை விசாரணை செய்ய அவர் கள் யார்?’ எனக் கோபம் கொள்ளும் கெஸ்டா பெரிலிங் அன்று மிக அற்புதமாக தேவாலயத்தில் பிரசங்கம் செய்கிறான். ‘இவ்வளவு திறமை வாய்ந்தவன் மீது எதற்காக இத்தனை குற்றச்சாட்டுகள்?’ என தலைமை மதகுரு குழம்பிப் போய்விடுகிறார். பாவம் அவரும் மனிதன்தானே என மன்னித்து விடுகிறார்கள். அவர்கள் ஊர் திரும்பும்போது வண்டியைக் குடை சாய வைத்து துரத்துகிறான் கெஸ்டா பெரிலிங். இப்படி ஒரு பக்கம் அன்பின் வெளிச்சத்தையும், மறுபக்கம் தீமையின் இருட்டையும் ஒன் றாகக் கொண்டவனாக கெஸ்டா பெரிலிங் அறிமுகமாகிறான். நாவல் இலக்கியத் தில் கெஸ்டா பெரிலிங் மறக்கமுடியாத கதாபாத்திரம். ஸிண்ட்ராம் என்ற கதாபாத் திரத்தை சைத்தானின் பிரதிநிதி போலவே செல்மா உருவாக்கியிருக்கிறார்.
‘தன்னை குடிகாரன் எனக் குற்றம் சாட்டும் திருச்சபை, மதகுருவின் வீடு பாசி பிடித்து ஒழுகுவதையோ, தனிமையில் வறுமையில் வாடுவதைப் பற்றியோ அறிய ஏன் ஆர்வம் காட்டவே யில்லை?’ என கெஸ்டா தனக்குள் குமுறுகிறான்.
‘‘குடிகார மக்களுக்குக் குடிகார மதகுரு இருப்பதில் என்ன தவறு?’’ என்று கேட்கிறான். ஆனால், விசாரணை குருமார்கள் வந்த நாளில் இதுதான் தனது கடைசிப் பிரசங்கம் என உணர்ந்த வுடன் அவன் மனம் மாறிவிடுகிறது.
மனிதனுடன் பழகிய புறாக்களைப் போல உயர்ந்த சிந்தனைகள் அவன் வார்த்தைகளில் தானே வந்து சிக்கிக் கொண்டன. உள்ளத்தில் எரியும் உணர்ச்சிகளை அழகிய வார்த்தைகளாக உருமாற்றினான். கண்ணில் நீர் மல்க கடவுளிடம் பிரார்த்தனை செய்தான். அவனது உரையைக் கண்டு சபை வியந்துபோகிறது.
தேவாலயத்தில் இருந்து வெளி யேறும் கெஸ்டா ஒரு சிறுமியை ஏமாற்றி மாவு வண்டியைக் கைப்பற்றுகிறான். அதை விற்றுக் குடிக்கிறான். வாம்லேண் டின் பணக்காரியான ஏக்பி சீமாட்டியின் ‘உல்லாசப் புருஷர்கள்’ குழுவில் இணைந்து செயல்படுகிறான். அங்கே நடைபெறும் கிறிஸ்துமஸ் விருந்து மிக விரிவாக எழுதப்பட்டுள்ளது.
மேரியான் ஸிங்க்ளேர், அன்னா ஸ்டார்ண்யாக் என்ற இரண்டு பெண்கள் அவனைக் காதலிக்கிறார்கள். ஆனால் அவன் எலிசபெத் டோனா என்பவளைத் திருமணம் செய்துகொள்கிறான்.
குடிகாரன் என்று விரட்டப்பட்ட கெஸ்டா மெல்ல மனமாற்றம் கொள்ள ஆரம்பிக்கிறான். துறவியைப் போல எதற்கும் ஆசைப்படாமல் வாழ தொடங்குகிறான். ‘நான் இறந்த பிறகு என்னை இரண்டு ஏழைகள் நினைவில் வைத்திருந்தால்கூட போதும். நான் ஏதாவது ஒரு தோட்டத்தில் இரண்டு ஆப்பிள் மரங்களை நட்டு வளர்த்துவிட்டு போனால் போதும்; வயலின் வாசிப் பவனுக்கு இரண்டு புதுப் பாட்டுகள் கற்றுக்கொடுத்துவிட்டால்கூட போதும். மற்றபடியே புகழோ, பெருமைகளோ எதையும் நான் வேண்டவில்லை’ என நாவலின் முடிவில் கெஸ்டா சொல்லும்போது, அவன் காவிய நாயகன் போல உருமாறுகிறான்.
பைபிள் கதைகளின் சாயலில் எழுதப்பட்ட ‘மதகுரு’ நாவல் அதன் கவித்துவ வர்ணனைகளுக்காகவும் சிறந்த கதை சொல்லும் முறைக்காகவும் மிகவும் புகழ்பெற்றது.
‘டோவர் சூனியக்காரி’ என்ற அத்தியாயத்தில் மாமிசம் கேட்டு வரும் சூனியக்காரியை விரட்டும் சீமாட்டி மார்பா, ‘உனக்குத் தருவதைவிடவும் மாக்பைப் பறவைகளுக்குத் தந்து விடுவேன்’ எனக் கத்துகிறாள். இதைக் கேட்டு கோபம் அடைந்த சூனியக் காரி ‘மாக்பைப் பறவைகள் உன்னைக் கொத்திக் கொல்லட்டும்’ என சாபமிடு கிறாள். மறுநிமிஷம் ஆயிரக்கணக்கானப் பறவைகள் அவளை கொல்லப் பறந்துவருகின்றன.
வானமே மூடிவிட்டது போல பறவை கள் ஒன்றுகூடுகின்றன. பறந்து தாக்கி அவளது முகத்தையும் தோள் பட்டையையும் பிறாண்டுகின்றன. அவள் அலறியபடியே ஓடிப் போய் கதவை மூடிக்கொள்கிறாள். அன்று முதல் அவளால் வீட்டை விட்டு வெளியே போக முடியவில்லை. வீட்டின் இண்டு இடுக்கு விடாமல் மூடியிருக்க வேண்டிய கட்டாயம் உருவானது. பறவைகளின் தாக்குதலில் இருந்து தப்ப முடியாத தனது விதியை எண்ணி அவள் அழுதாள். ‘தற்பெருமைக்கானத் தண்டனை இப்படித்தான் அமையும்’ என முடிகிறது அந்த அத்தியாயம். இதை வாசிக்கும்போது ஆல்ஃப்ரட் ஹிட்ச் காக்கின் ‘பேர்ட்ஸ்’ படம் நினைவில் வந்துபோனது. இந்தப் படம் வெளிவருவதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டுள்ளது இந்த நாவல்.
செல்மா லாகர்லெவ் 1958-ம் ஆண்டு வாம்லேண்ட் என்கிற இடத்தில் பிறந்தார். இளம்பிள்ளை வாதம் தாக்கியவர் என்பதால் சிறுவயது முழுவதும் வீட்டுக்குள்ளும் மருத்துவமனைகளிலும் அடைந்து கிடந்தார். பின்பு ஆசிரியர் பயிற்சி பெற்று, பள்ளி ஆசிரியராக பணியாற்றினார். அவரது ‘மதகுரு’ நாவ லுக்கு அடிப்படை வாம்லேண்ட் பகுதியில் அரை நூற்றாண்டுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவமே. அவருடைய பாட்டி அதைப் பற்றி சொல்லியதில் இருந்து, தான் உத்வேகம் பெற்று எழுதியதாக கூறுகிறார் செல்மா லாகர்லெவ்.
‘மதகுரு’ பைபிளின் மொழி போல கவித்துவமாக எழுதப்பட்ட நாவல். அதில் நாடோடி கதைகளும் புராணீகத்தன்மையும் ஊடுகலந்துள்ளன என்கிறார் விமர்சகர் பிராங்.
கெஸ்டாவைப் பற்றி விவரிக்கும் சம்பவக் கோவைப் போலவே நாவல் வடிவம் கொண்டிருக்கிறது. 38 கதைகள் ஒன்றுசேர்த்து ஒரே சரடில் கோக்க பட்டிருப்பது போலவே நாவல் உருவாக்க பட்டுள்ளது. ஒரு பிரசங்கத்தில் தொடங் கும் நாவல் ஏக்பி சீமாட்டியின் ‘உல்லாச புருஷர்’களுக்கு கெஸ்டா செய்யும் பிரசங்கத்துடன் நிறைவுபெறுகிறது. இதன் ஊடே வாழ்வின் அர்த்தத்தைப் புரிந்துகொள்கிறான் கெஸ்டா.
‘கெஸ்டா பெரிலிங் ஸாகாவைப் படித்து அனுபவிப்பவர்கள் பாக்கியசாலி கள்’ என முன்னுரையில் க.நா.சு கூறு கிறார். அது மறுக்கமுடியாத உண்மை!
நன்றி – இந்து தமிழ் திசை

எல்லா உணவும் உணவல்ல!
பெரியாரின் இடதுசாரித் தமிழ் தேசியம்
சுவாமி விவேகானந்தர் வாழ்வும் வாக்கும்
வம்சமணிதீபிகை - எட்டயபுர சமஸ்தான சரித்திரம்
திருப்பாடற்றிரட்டு - குணங்குடி மஸ்தான் சாஹிபு பாடல்கள்
பரண்
பெரியார் களஞ்சியம் – குடிஅரசு (தொகுதி-14)
வகை வகையான அசைவ சமையல்கள்
வடநாட்டில் பெரியார் (பாகம் - 2)
திரையெங்கும் முகங்கள்
பெரியாரியல் பாடங்கள் (தொகுதி -1)
கூளமாதாரி
அவரவர் அந்தரங்கம்
நெகிழும் வரையறைகள் விரியும் எல்லைகள்
உலகைச் சுற்றி மகிழ்வோம்
தப்புத் தாளங்கள்
பாலியல் வன்முறை: யார் குற்றவாளி?
இந்தியா: நள்ளிரவு முதல் புத்தாயிரம் ஆண்டு வரையிலும் அதற்கு அப்பாலும்
பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணரின் வாழ்வும் வாக்கும்
மனவாசம்
சகலமும் கிடைக்க சதுரகிரிக்கு வாங்க
சிவப்புச் சின்னங்கள்
வண்ணநிலவன் கவிதைகள்
கொற்கை
ராஜன் மகள்
மோகினித் தீவு
என் வாழ்வு
கல் சூடாக இருக்கிறது
தமிழ் மனையடி சாஸ்திரம்
நெய்தல் கைமணம்
இந்துக்கள் ஒன்றுசேர முடியுமா?
சுகவாசிகள்
மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி ஏன்?
ஒரு புத்திரனால் கொல்லப்படுவேன்
திருக்குறள் சாஸ்திரங்களின் சாரமா?
தவிர்க்கவியலா தெற்கின் காற்று (உலகச் சிறுகதைகள்)
இந்தியப் பெருஞ் சித்தர்கள் ஆறு பேர்
திருமலை கண்ட திவ்ய ஜோதி
பிரக்சிட்
சித்தர்களின் வரலாறும் வழிபடும் முறைகளும்
குறத்தி முடுக்கு
உலகப் புகழ்பெற்ற தஸ்தயேவ்ஸ்கி கதைகள்
இரண்டாவது காதல் கதை
உலகைப் புரட்டும் நெம்புகோல்
புத்தர் ஜாதக கதைகள்
வரம் தரும் ஸ்ரீ தேவி மஹாத்மியம்
நினைப்பதும் நடப்பதும்
முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை
தென்றல் காற்று (வரலாற்று நாவல்)
அண்ணல் அடிச்சுவட்டில்
திருவிளையாடற் புராணம்
பசி
ஆஞ்சநேயர்
திருமலை திருப்பதி அரிய தகவல்கள்
சில பெண்கள் சில அதிர்வுகள்: வேத, இதிகாச, புராண காலங்களில்
நித்ய கன்னி
தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை
கடைசிக் களவு
தேவை பாலியல் நீதி
படச்சுருள் ஏப்ரல் 2021 - திராவிட சினிமாவும் சமூக நீதியும் சிறப்பிதழ்
ஐஸ்வர்யம் தரும் விரதங்களும் பூஜைகளும்
தலைமுறைகள்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 8)
திராவிடர் இயக்கத்தின் தோற்றமும் - தேவையும்
திருமந்திரம் மூலம் முழுவதும்
சீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்
கைம்மண் அளவு
இண்டமுள்ளு
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 7)
தமிழ்நாடன் ( இந்திய இலக்கியச் சிற்பிகள்)
சுற்றுவழிப்பாதை
பொற்காலப் பூம்பாவை
மோக முள்
பொய்த் தேவு
பணம் சில ரகசியங்கள்
புலன் மயக்கம் (நான்கு பாகங்களுடன்)
பிறழ்
தமிழ்சினிமா -படைப்பூக்கமும் பார்வையாளர்களும்
பிரம்ம சூத்திரம்
பணியில் சிறக்க
நாத்திகனின் பிரார்த்தனைகள்
ஜாதியை அழித்தொழிக்கும் வழி
திருக்குறள் நீதி கதைகள்
திருக்குறள் நெறியில் திருமாவின் வாழ்வியல்
சமனற்ற நீதி
குந்தரின் கூதிர்காலம்
பல்லவர் வரலாறு
செம்மணி வளையல்
தோகை மயில்
திருக்குறள் கலைஞர் உரை
கணிதம் வாய்பாடும் விளக்கங்களும்
நீதிக் கட்சியின் தந்தை சர்.பிட்டி. தியாகராயர்
நேரு மேல் இவர்களுக்கு ஏன் இந்தக் கோபம்?
குண்டலினி எளிய விளக்கம்
கேளடா மானிடவா
பக்தர்களே! பதில் சொல்வீர்!!
சங்க சான்றோர் வழியில் இலெனின் தங்கப்பா
சாண்டோ சின்னப்பா தேவர்
தத்துவம்: தொடக்கப் பயிற்சி நூல்
காது கொடுத்துக் கேட்டால் என்ன?
தலை சிறந்த விஞ்ஞானிகள்
நீதி நூல் களஞ்சியம்
சப்தரிஷி மண்டலம்
சண்டிதாசரின் காதல் கவிதைகள்
சன்னத்தூறல்
நீங்களும் வெற்றியாளர்தான்
'ஷ்' இன் ஒலி
கருநாகம் (உலகச் சிறுகதைகள்)
கருத்தாயுதம்
கரும்பலகைக்கு அப்பால் (ஆசிரியர் குறித்த திரைப்படங்கள்) 
Reviews
There are no reviews yet.