அசோகமித்திரனின் இந்த புத்தகத்தை நாவல் வரிசையில் சேர்ப்பதை விடவும் வரலாற்று சம்பவங்களை கோர்த்து எழுதிய ஒரு நூல் எனக் கொள்ளலாம். ஐதராபாத் சமஸ்தானம் இந்திய சுதந்திரத்திற்கு கொஞ்ச வருடத்திற்கு முன்பிலிருந்து ஆரம்பிக்கிறது. நூலின் நாயகன் சந்திரசேகரன் கல்லூரி மாணவன். அவனின் குடும்பம் வசிக்கும் லான்சர் பராக்சின் குடியிருப்புகளிலிருந்து ஆரம்பிக்கும் கதைப் போக்கு அவன் படிக்கும் கல்லூரி, அவன் சைக்கிளில் சுற்றிவரும் டாங்க் பண்ட் சாலை, செகந்திராபாத், மோன்டா என கதையின் களம் அமைந்திருக்கிறது.
நகரத்தில் ரஜாக்கர்கள் நடத்தும் அராஜகங்கள், கல்லூரி மாணவர்கள் நடத்தும் க்விட் காலேஜ் இயிஅக்கம் (ஐதராபாத் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைப்பதற்கான இயக்கம்) என இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு நடந்த நிஜாம் பிரதேச இணைப்பு தொடர்புடைய நகிழ்வுகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார். நிஜாம் காலத்து ஐதராபாத்தை அந்த டாங்க் பண்ட் சாலையோரத்தில் நடந்தபடியே குளிர்ந்த காற்றின் சுகந்தத்தோட ரசிக்க வைத்திருக்கிறார். பருவத்தில் ஒரு இளைஞனின் மன ஊசலாட்டங்களை சந்துருவை கருவியாக வைத்து வெளிப்படுத்தியிருக்கும் இடங்கள் அந்த பருவத்தின் நிஜத்தை ஒத்திருக்கின்றன.
காந்தி இறந்த போது அவர்கள் குடும்பமும், அந்த நகரமும், சந்திரசேகரனின் அழுகையும், மன அழுத்தமும் ஒரு சிறு சலனத்தை நம்முடைய மனநிலையிலும் தந்துவிட்டுப் போகிறது. இந்திய யூனியனுடன் நிஜாம் பிரதேசத்தை இணைப்பதற்காக இந்திய யூனியன் அரசாங்கம் நிஜாம் பிரதேசத்தின் மீது ஏற்படுத்திய பொருளாதாரத் தடை. அதன் பலனாக ஏற்படும் தானியத் தட்டுப்பாடு, பெட்ரோல், டீசல் இல்லாததால் கடலையெண்ணையில் ஓடும் நகரப் பேருந்துகள்… பஜ்ஜி, போண்டா சுடும் வாசனையோடு போகும் பேருந்துகள் என அப்போதைய காலகட்டங்களை ஒரு வரலாற்று பதிவாக சந்திரசேகரன் என்னும் மாணவனின் வழியாக தன் பால்ய கால ஐதராபாத்தின் நினைவுகளை அசோகமித்திரன் நம்முடன் பகிர்ந்து கொள்கிற படைப்பு இது.
– ர.கேசவராஜ்

அபாகஸ்: எண்களின் இரகசியம்
கதீட்ரல் இரவாக் குறிப்புகளின் சரீரம்
பாரதம் போற்றிய பாரத ரத்னாக்கள்
சமஸ்கிருத ஆதிக்கம்
நாலடியார் மூலமும் உரையும்
சாண்டோ சின்னப்பா தேவர்
டோமினோ 8
சபரிமலை யாத்திரை (ஒரு வழிகாட்டி)
அயோத்திதாசர் தொடங்கிவைத்த அறப்போராட்டம்
அந்தக் காலம் மலையேறிப்போனது
ஒரு நிமிடம் ஒரு செய்தி (பாகம் - 4)
நீடாமங்கலம்: சாதியக் கொடுமையும் திராவிட இயக்கமும்
புதிதாய் பிறப்போம்! சரித்திரம் படைப்போம்!
ஓநாயும் நாயும் பூனையும்
அரைக்கணத்தின் புத்தகம்
The Story of Theophany of God and Other Stories
செம்மணி வளையல்
புகார் நகரத்துப் பெருவணிகன்
பெரியார் களஞ்சியம் - பகுத்தறிவு - 3 (பாகம்-35)
கவியோகி சுத்தானந்த பாரதியார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
தீண்டாத வசந்தம்
ஆன்மீகச் சுற்றுலா வழித்துணைவன்
அறியப்படாத தமிழகம்
ஒரு ரகசிய விருந்துக்கான அழைப்பு
BOX கதைப் புத்தகம்
அய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்
இயக்கம்
சிறை என்ன செய்யும்?
சூரியன் மேற்கே உதிக்கிறான்
சிதம்பர ரகசியம்
ஆரிய மாயை
சந்திரஹாரம்
பெண்களுக்கான பல்சுவை குறிப்புகள்
கிரா என்றொரு கீதாரி
தண்டனைக் களமாகும் பெண்ணுடல்
பண்முக ஆளுமை அயோத்திதாசப் பண்டிதர்
பெரியாரியம் - ஜாதி தீண்டாமை (உரைக்கோவை-2)
அஞ்சும் மல்லிகை
தீண்டாமையை ஒழித்தது யார்?
ஒரு விரல் புரட்சி
உணவே மருந்து
கற்பனைகளால் நிறந்த துளை
அணுசக்தி அரசியல்
HINDU NATIONALISM
திருக்குறள் கலைஞர் உரை (மக்கள் பதிப்பு)
The Great Scientist of India
தமிழர் மதம்
பிஜேபி ஒரு பேரபாயம்
சந்திரமதி
பா.ச.க பாசிச எதிர்ப்பின் பாதை
பெண்களுக்கான வீட்டுக் குறிப்புகள் 2000
உண்மை இதழ்: ஜூலை – டிசம்பர் (முழு தொகுப்பு 2019)
கிரிமீலேயர் கூடாது ஏன்?
அனைத்து தெய்வங்களுக்கான 108 போற்றிகள்
எல்லாம் செயல்கூடும் ( காந்திய ஆளுமைகளின் கதைகள் )
காதல்
On The Origin Of Species
தமிழக மகளிர்
நினைவோ ஒரு பறவை
உலகம் போற்றும் விஞ்ஞானிகள்
வளம் தரும் விரதங்கள்
கீழடியில் கேட்ட தாலாட்டுகள்
இமைக்கணம் – மகாபாரதம் நாவல் வடிவில்
பெண்கள் அலங்காரப் பொம்மைகளா?
சண்டிதாசரின் காதல் கவிதைகள்
கிருஷ்ணதேவ ராயர்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-16)
தமிழர் பண்பாடும் – தத்துவமும்
நவபாஷாணன்
நீலக் கடல்
பெரியார் களஞ்சியம் - ஜாதி - தீண்டாமை - 11 (பாகம்-17)
சந்திரகிரி ஆற்றங்கரையில்
காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும்
சொலவடைகளும் சொன்னவர்களும்
அராஜகவாதமா? சோசலிசமா?
THE POISONED DREAM
நீலம்
கடவுள் பக்தர்களின் சிந்தனைக்கு
கண்ணகி தொன்மம் 


Reviews
There are no reviews yet.