இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

புனலும் மணலும்
ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்
மாறுபட்டு சிந்தியுங்கள்
சிவப்பு ரோஜா
மாலுமி
நாட்டுப்புற கலைகள்
பெரியார் டிரஸ்ட்டுகள் ஒரு திறந்த புத்தகம்
கசவாளி காவியம்
பருவம்
கருத்தாயுதம்
துயர் துடைக்கும் ஆலயங்கள்
வலி
எஸ்.எஸ்.தென்னரசின் தேர்ந்தெடுத்த நாவல்கள்
இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை
டிடிபி கற்றுக்கொள்ளுங்கள்
விக்கிரமாதித்தன் கதைகள்
அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா?
சமஸ்கிருத ஆதிக்கம்
ஜலதீபம் (மூன்று பாகங்களுடன்)
செம்மொழித் தமிழ்: மொழியியல் பார்வைகள்
இனி போயின போயின துன்பங்கள்
அகத்தியர் முதல் வாரியர் வரை சித்தர்கள் 60 பேர் : வாழ்வும் வாக்கும்
எனும்போதும் உனக்கு நன்றி
நீங்காமல் தானே நிழல் போல நானே
சித்திர பாரதி - 220 அரிய புகைப்படங்களுடன் ஆதாரபூர்வமான பாரதி வாழ்க்கை வரலாறு
ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு
ஒரு நகரமும் ஒரு கிராமமும்
நடுநிலைமை அற்றவனின் தமிழ் சினிமா குறிப்புகள் (பாகம் - 1)
மொழியைக் கொலை செய்வது எப்படி?
சிறுகோட்டுப் பெரும் பழம்
இது கறுப்பர்களின் காலம்
இரும்புக் குதிகால்
நகரத்திற்கு வெளியே
கிராமத்து தெருக்களின் வழியே
அறமும் அரசியலும்
பருந்து
எல்லோருக்குமானவரே
அரிஸ்டாட்டில் அறிவு உலகத்தின் ஆரம்பக்குரல்
எழுதாக் கிளவி
சட்டைக்காரி
கோபல்லபுரத்து மக்கள்
போலி அறிவியல் - மாற்று மருத்துவம் - மூடநம்பிக்கை
முதல் ஆசிரியர்
நுழை
நாயகன் - சே குவேரா
நினைவின் குட்டை கனவு நதி
தலைமைப் பண்புகள்
கனல் வட்டம்
நல்லனவெல்லாம் தரும் திருவாரூர் மாவட்டத் திருக்கோயில்கள்
உன்னத வாழ்வுக்கு ஆறு இரகசிங்கள்!
ஓசை உடைத்த கவிதைகளில் இசை
ஆரிய மாயை
கமலி
தெய்வப்புலவர் திருவள்ளுவர்
அன்பிற்குரிய D ஆகிய உனக்கு...
கிருஷ்ணதேவ ராயர்
சுந்தரர் தேவாரம் ஏழாம் திருமுறை
சிதம்பர ரகசியம்
சில்மிஷ யோகா
கலைஞரின் பேனா எழுதியதும்... சாதித்ததும்...
தமிழக மகளிர்
பூண்டுப் பெண்
கற்றுக்கொடுக்கிறது மரம்
புத்தி ஜீவிகளும் தீனிப்பண்டாரங்களும்
பெண்களும் சமூகமும் அன்றும் - இன்றும்
இன்று புதிதாய்ப் பிறந்தோம்
கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்த கதை
அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்!
சந்திரமதி
இதய ரோஜா
பாண்டியன் பரிசு 


Reviews
There are no reviews yet.